பிள்ளைகளால் இடிந்து போய் நிற்கும் இயக்குனர் சங்கர். என்னாச்சு?

பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே அது சங்கர்தான். இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களில் அவர் படு பிஸியாக இருக்கிறார்.

இருப்பினும் தனது இரு மகள்களை நினைத்து அவர் படும் துயரத்துக்கு அளவே இல்லையாம்.

காசு பணம்தான் உள்ளதே? வேறு என்ன பிரச்சனை ‘? என்று பலரும் பேசுகின்றனர். ஆனால் பெற்று, பார்த்துப் பார்த்து வளர்த்தெடுக்கப்பட்ட மகள்கள் கஷ்டப்படும் போது எந்த பெற்றோருக்கும் கவலை இருக்கத்தான் செய்யும்.

அப்படி என்ன கவலை என்கிறீர்களா?

முதலில் மூத்த மகள் பிரச்சனையை பற்றி பார்க்கலாம்.

மூத்த மகள் பெயர் ஐஸ்வர்யா சங்கர். ஐஸ்வர்யாவை அவரது தந்தை சங்கர் கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

கிரிக்கெட் வீரர் ரோஹித்தின் குடும்பம் மிகவும் பணக்கார குடும்பம்.

2000 கோடி சொத்துக்கு அதிபருடைய மகன் தான் கிரிக்கெட் வீரர் ரோஹித்.

ஆனால் திருமணம் ஆன மூன்றே மாதத்தில் ஷங்கரின் மருமகன் ரோஹித் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதனால் சங்கரின் மகள் வாழ்க்கை கேள்விக்குறியானது. இதனால் சங்கரும், அவரது குடும்பத்தினரும் மிகவும் மனமுடைந்து போயினர்.

குடும்பநல சட்டப்படி திருமணம் ஆகி குறிப்பிட்ட காலம் கழித்து தான் விவாகரத்து செய்ய முடியும் என்பதால் அதற்காக காத்திருந்தார் ஐஸ்வர்யா.

குடும்பத்தினர் சமாதானம் செய்து வைத்தும் பலன் இல்லாமல் அமைதியாக காத்திருந்து விவாகரத்தை பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா சங்கர்.

தற்போது சங்கரின் வீட்டில் தான் ஐஸ்வர்யா தங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் தான் ஷங்கரின் மகன் அர்ஜித் சங்கர், இளைய மகள் அதிதி சங்கர் ஆகியோருடன் ஐஸ்வர்யா சங்கர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மூத்த மகளின் வாழ்க்கை இப்படி இருக்க இளைய மகள் அதிதிக்கு எப்படி நல்ல ஒரு வரனை அமைத்துக் கொடுப்பது? என்பது சங்கருக்கு இருக்கும் அடுத்த மன உளைச்சலாக உள்ளது.

பிள்ளைகளைத் திருமணம் செய்து வைக்கும் முன், ஒன்றுக்கு 30 முறையாவது யோசித்து, தீர விசாரித்து மணம் முடித்துக் கொடுங்கள்.

இல்லாவிட்டால், விழும் பேரிடிகளைத் தாங்கும் தெம்பானது எந்தப் பெற்றோருக்கும் இருக்காது. உண்மைதானே?

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE