நடிகர் விஜய்-சங்கீதாவுக்கு ஷாஷா என்ற மகளும் ஜேசன் சஞ்சய் என்ற மகனும் உள்ளனர். இதில் ஜேசன் சஞ்சய்க்கு திரைப்படத்துறை விருப்பமான தொழிலாகும். இதற்காக அவர் கனடா, லண்டன் ஆகிய இடங்களுக்கு சென்று படித்தார். தந்தையைப் போல் நடிகராக விரும்பாமல் தனது தாத்தாவான எஸ்ஏ சந்திரசேகர் போல் இயக்குனராக விரும்பினார். எனவே அது தொடர்பாக படிக்கவும் செய்தார்.

ஜேசன் சஞ்சய் எடுத்த குறும்படம்

திரைப்பட இயக்குனர் ஆவதற்காக வெளிநாடு சென்று படித்துக் கொண்டிருக்கும் போதே ஜேசன் சஞ்சய் “புல் த ட்ரிகர்” என்ற குறும்படத்தை இயக்கினார். இந்த குறும்படத்தின் மேக்கிங்கும், கதை சொன்ன விதமும், இயக்கமும் நன்றாகவே இருந்ததாக பல பேச்சுக்கள் எழுந்தன. இதேபோல் அந்த குறும்பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களும் வெளியாகின.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

இந்தப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஜேசன் சஞ்சய் இயக்குநராகி நடிகர் விஜயை வைத்து படம் எடுப்பார் என எதிர்பார்த்தனர். அப்பா மகன் காம்போவில் அல்டிமேட்டாக ஒரு படம் வெளிவரும் என ஆசைப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் விஜயின் மகன் சஞ்சய் பற்றிய ஒரு அறிவிப்பு திரைத்துரையில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

லைக்காவுடன் ஒப்பந்தம்

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா புரொடக்சன்ஸ் என்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியானது. இது ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான போது அதற்கான ஒப்பந்தத்தில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் கையெழுத்து போடும் படங்கள் இடம்பெற்று இருந்தன.

யார் ஹீரோ?

ஜேசன் சஞ்சயின் முதல் படத்தில் யார் ஹீரோ? என்ற கேள்வி பலருக்கு மத்தியில் எழுந்துள்ளது. விஜயாகத்தான் இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் விஜய் சேதுபதி அல்லது ஜீவா இந்த படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. ஜேசனே நடிக்கலாம் என்றும், அமீர்கான் கூட முதலில் படம் இயக்கத்தான் சினிமாவுக்குள் வந்ததாகவும் எஸ்ஜே சூர்யா கருத்து தெரிவித்து இருந்தார்.

விஜய்க்கே தெரியாமல் ஒப்பந்தம்?

தனது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராகப் போகிறார் என்பதை விஜய் எதிர்பார்த்து இருக்கலாம். ஆனால் லைக்காவுடன் கூட்டணி என்ற அறிவிப்பு வரும் வரை நடிகர் விஜய்க்கு தெரியாது என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் ரகசியமாக காய்களை நகர்த்தியதாகவும் சொல்லப்படுகிறது.

2 தாத்தாக்களின் சப்போர்ட்

ஏற்கனவே நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் சங்கீதா தனது பெற்றோர் வசிக்கும் நாடான லண்டனுக்கு சங்கீதா-ஜேஷன்-ஷாஷா ஆகியோர் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. லண்டனில் இருக்கும் சங்கீதாவின் அப்பா அதாவது ஜேசன் சஞ்சய் உடைய தாத்தா பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறாராம்.

அவரும் லைகா சுபாஷ்கரனும் நண்பர்கள் என்றும் சொல்லப்படுகிறது இதனால்தான் சுபாஷ் கரனிடம் பேசி ஜேசனின் இயக்கத்தில் படம் எடுங்கள் என சொல்லி இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சங்கீதாவின் அப்பாவின் சப்போர்ட், நடிகர் விஜயின் அப்பாவுடைய சப்போர்ட் என இரண்டு தாத்தாக்களின் சப்போர்ட் ஹெவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை இல்லையா?

தாய்-தந்தை இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக ஜேசன் சஞ்சையும் நடிகர் விஜயும் சந்திக்கவே இல்லை. ஒன்றாக பேசவே இல்லை என்றெல்லாம் தகவல் வெளியாகின. இதனை முறியடிக்கும் விதமாக ஜேசன் சஞ்சயும் – விஜயும் கனடாவில் ஒரு உணவகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியது. ஆனால், அது 4 ஆண்டுகளுக்கு முன் பிகில் படத்தின் ஷூட்டிங்குக்கு இடையில் நடந்த சந்திப்பு என்றும் சொல்லப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE