நடிகரும், இசையமைப்பாளருமாக விஜய் ஆன்டனியின் மகள் மீரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆன்டனியிள் இல்லத்தில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சர்ச் பார்க் பள்ளியில் பயின்ற அவர், நேற்று இரவு வணக்கம் போல் உணவருந்தி விட்டு தனது அறைக்கு உறங்கச் சென்று இருக்கிறார்.

அதிகாலை 3 மணியளவில் அவரது மகள் மீரா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

உடனடியாக வீட்டில் இருந்த பணியாளரை அழைத்து அவரது உதவியுடன் தூக்கில் இருந்து இறக்கி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

காவேரி மருத்துவமனையில் மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மீராவின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிணக்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது.

விஜய் ஆண்டனியும் அவரது மனைவி பாத்திமாவும் மகள் மீராவின் இழப்பு பற்றி கடும் மனவேதனையுடன் உள்ளனர்.

2 நாட்களாகவே அவர் மன அழுத்தத்தோடு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது என்று கூறப்படுகிறது.

பிளஸ் டூ படித்துவந்த அவர் படிப்பு தொடர்பாக மன அழுத்தத்தில் இருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடைபெறுகிறது

குடும்பம் சார்ந்த பிரச்சனையோ? அதனால்தான் அதிகாலை 3 மணிக்கு மகளைப் பார்க்க விஜய் ஆன்டனி சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? என விசாரணை நடைபெறுகிறது.

இறுதிச் சடங்குக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டுவரப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE