சீரியல் நடிகர் மாரிமுத்து சமீபத்தில் உயிரிழந்தது அவர்களது ரசிகர்கள் மத்தியில் அதிக சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் அவர் பேசிய வார்த்தைகள் பலித்து விட்டதாகவே பலரும் நம்புகின்றனர்.

அப்படி என்ன சொன்னார் மாரியப்பன்?

“ஒரு மாதிரி நெஞ்சு வலிப்பது போல இருக்கு. ரொம்ப கஷ்டமா இருக்கு. திரும்பத் திரும்ப பேசுரேன் இல்ல? ஏதோ கெட்டது நடக்க போற மாதிரியே இருக்கு” இது போன்ற டயலாக்குகள் ஏற்கனவே எதிர்நீச்சல் நாடகத்தில் அவரால் உச்சரிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவரது இடுப்புக்கு மேல் ஒரு உறுப்பு செயலிழக்கக்கூடும் என்பது போல் ஒரு ஜோதிடர் கணித்திருந்தார். அதற்கு அவர் காரசாரமாக பதில் அளித்து இருந்தார். இதனால் ஜோதிடர்கள் யாரேனும் மாரிமுத்துவுக்கு செய்வினை வைத்ததாக கூட வதந்திகள் வெளியாகின.

டப்பிங் ஸ்டுடியோவில் எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் கொடுக்கும் போது தான் அவர் மாரடைப்பை உணர்ந்ததாக சொல்லப்பட்டது. அப்போது டப்பிங் பேசிய வசனமும் அவரது வாழ்வில் ஒத்துப் போகும் அளவுக்கு இருந்தது. இதுதான் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து உயிரிழக்கும் முன் கடைசியாக பேசிய டயலாக்.

“அம்மா என்ன கொல்லும்மா. நான் நிம்மதியா போய் சேர்ந்துடுறேன். அம்மா என்னால வாழ முடியாதும்மா.” என தாயாக நடிக்கும் சக நடிகையின் கையை எடுத்து கழுத்தில் வைத்துக் கொண்டு ஆதி குணசேகரன் கதறுவது போன்ற ஒரு டயலாக் இருந்தது.

அந்த வார்த்தை பழித்து விட்டதாவே பலரும் கருதுகின்றனர். ஆனால், “சாவேன்” என வாயால் சொன்ன பலரும் செத்துவிடவில்லை. அந்த உணர்ச்சி மிக்க டயலாக்கிற்கு அதிக டென்ஷனோடு அதிக அழுத்தம் கொடுத்து அதே உணர்வோடு அவர் நடித்தபடி டப்பிங் கொடுக்கும் போது அந்த உச்சரிப்பின் அழுத்தமானது ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தி இதயத்தின் பம்பிங் செயல்பாட்டில் தடையை ஏற்படுத்தி இருக்கலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மாரிமுத்துவுக்கு மாற்றாக அடுத்த யார்?

மாரிமுத்து என்ற நடிகர் தான் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் எதிர்நீச்சல் நாடகத்தை தூக்கி நிறுத்தியவர். அவர்தான் அந்த சீரியலின் ஹைலைட்டே. அப்படி இருக்க அவருக்கு மாற்றாக ஒரு நடிகரை போட வேண்டும். அதுவும் பலம் வாய்ந்த ஒரு நடிகரை போட வேண்டும் என்ற ஒரு அழுத்தம் சின்னத்திரை பட குழுவுக்கும் அதன் இயக்குனர் திருச்செல்வத்துக்கும் உள்ளது.

ஏற்கனவே இறுதிச் சடங்கு நடைபெறுவதற்கு முன்பாகவே யார் அடுத்த நடிகர்? என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதுபற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல எனக் கூறிய இயக்குநர் திருச்செல்வம், அது பின்னர் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார் இந்த நிலையில் எழுத்தாளரும் நடிகருமான வேளா ராமமூர்த்தி எதிர்நீச்சல் நாடகத்தில் ஆதி குணசேகரன் கதாபாரத்தில் மாரிமுத்துவுக்கு மாற்றாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE