நடிகர் அஜித் திரைத் துறையில் முன்னேறி கொண்டு வந்த தருணம்.ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்தில் அவருக்கு தயாரிப்பாளர் காஜா மைதீன் வாய்ப்பு கொடுத்தார். செய்தித்தாள்களில் நடிகர் கார்த்திக், மீனா, அஜித் ஆகியோர் இடம்பெற்ற புகைப்படங்கள் ஒன்றாக சேர்ந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது..

சிறந்த காம்போ என்று, ரசிகர்கள் எதிர்பார்த்த காத்திருந்தபோது, நடிகர் அஜித்துக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தயாரிப்பாளர் காஜா மைதீனை சுற்றி இருந்தவர்கள் அவரது முடிவை மாற்ற முயன்றனர்.

“நீயே கடன் வாங்கி படம் எடுக்கிற. அஜித் இனி எந்திரிச்சு வர வாய்ப்பு இல்ல. அதனால வேற நடிகரை பாரு” என கூறிவந்தனர் இதனால் மனம் மாறிய காஜா மைதீனும் மறுநாள் அஜித்துக்கு பதில் பிரசாந்த் என கூறி செய்து தாள்களில் வெளியிட்டார்.

இதனைப் பார்த்த நடிகர் அஜித் மருத்துவமனையில் இருந்து நேராக தயாரிப்பாளர் காஜா மைதீனை சென்று பார்த்தார். ” நீங்க இப்படி பண்ணா என்னோட சினிமா கரியரே பாதிக்கப்பட்டு விடும். எனவே எப்படியாவது இந்த படத்தை முன்பு பேசியது போல் எனக்கே வாய்ப்பாக கொடுங்கள் என்று அஜித் மிகவும் கெஞ்சி கேட்டாராம். இதனால் இரக்கப்பட்ட தயாரிப்பாளர் காஜா மைதீனும் ஏற்கனவே பேசிய அதே 22 லட்சம் சம்பளத்திற்கு நடிகர் அஜித்தை ஆனந்த பூங்காற்றே படத்தில் ஒப்பந்தம் செய்ததாகவும், இதனால் நடிகர் அஜித் உடல்நலம் சரியில்லாத போதும் வந்து ஆனந்த பூங்காற்றே படத்தை நடித்துக் கொடுத்ததாகவும் சினிமா ரிபோர்டர் செய்யார் பாலு ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

படம் முடிந்த வெற்றி விழா கொண்டாடும் போது அங்கு பிரசாந்த் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

அப்போது அஜித் அருகில் நிற்கும் போதே பிரசாந்துக்கு மட்டும் மாலை போட்டு காஜா மைதீன் வரவேற்றார். அப்போது பிரசாந்த் மாலையோடு சிரித்துக் கொண்டிருப்பது போன்றும், அஜித் தலை குனிந்து கொண்டிருப்பது போன்றும் எடுத்த புகைப்படம் அப்போது செய்தித்தாள்களில் மிகவும் பிரபலமாக வைரலானது.

இது தனது சினிமா கேரியரில் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்று அஜித் கருதினார். இதை அடுத்து காஜா மொய்தீன் மீண்டும் அஜித்தை வைத்து ஜனா என்ற படத்தை தயாரித்தார்.

தனது அவமரியாதைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நடிகர் அஜித் ஜனா படத்தை 3 ஆண்டுகள் இழுத்து அடித்து முடித்துக் கொடுத்ததாக செய்யாறு பாலு குறிப்பிட்டுள்ளார்.

எனவே எப்போதெல்லாம் தனது வாழ்க்கையில் மிகவும் தோல்வி போன்ற தருணங்கள் ஏற்படுகிறதோ, அப்போது, தான் திரையுலகில் அவமதிக்கப்பட்ட இந்த புகைப்படத்தை எடுத்து பார்த்து நடிகர் அஜித் தன்னை வெறியேற்றிக்கொண்டு நடிப்பாராம். எனவே இந்த புகைப்படம் ஆனது நடிகர் அஜித்துக்கு மட்டும் இன்றி அவரது ரசிகர்களையும் வெளியேற்ற செய்யும் அளவுக்கு ஒரு ஃபையரான புகைப்படமாக மீண்டும் தற்போது உலா வருகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE