நடிகர் ஜெயம் ரவி தமிழ் திரையுலகில் அதிகம் கிசுகிசுக்கப்படாத நடிகர்களில் ஒருவர்.

பெரும்பாலும் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கும் ஜெயம் ரவிக்கு நடிகர் கார்த்தியைத் தவிர பெரிய அளவில் நடிகர்களின் நட்பு வட்டாரம் இல்லை.

குடும்பப் பாங்கான நடிகர்

பொதுவாக ‘குடும்ப பாங்கான’ என்ற வார்த்தை நடிகை களுக்கு குறிப்பிடப்படும். ஆனால், கண்ணியத்தோடு நடிக்கும் ஜெயம் ரவிக்கும் இந்த வார்த்தையானது பொருந்தும்.

ஜெயம் படத்தில் நடித்ததில் இருந்து திரை உலகில் அறிமுகமான அவர், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம் என தனது ரியல் லைஃப் கேரக்டரை போன்று குடும்பப் பாங்கான கதைகளில் அதிகம் நடித்து பிரபலமானார்.

இவருக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் ஒரு சில நடிகர்களை போன்று இவரை வெறுப்பாக பேசி சமூக வலைதளங்களிலோ அல்லது பத்திரிகை ஊடகங்களோ பெரும்பாலும் பதிவிட்டு எவ்வித எதிர்ப்புகளும் கிளப்பியது இல்லை.

ஆர்த்தி காலேஜ் லவ்வா?

நடிகர் ஜெயம் ரவி கல்லூரி காலத்தில் இருந்தே ஆர்த்தியை காதலித்து இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் 2009-ல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கூட டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியின் மகனாக நடித்திருப்பார்.

இவரது அண்ணன் ராஜா ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார்.

திரை பின்னணியிலிருந்து வந்த இவர் ஒரு சினிமா தயாரிப்பாளரின் மகளைத்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வீட்டோட மாப்பிள்ளை ஆனாரா?

திருமணத்துக்குப் பிறகு வெகு நாட்கள் நடிகர் ஜெயம் ரவி மாமியாரின் வீட்டில் தான் அதிகம் இருந்ததாக சில தரப்பில் சொல்லப்படுகிறது.

ஜெயம் ரவி தனது மாமியாரின் தயாரிப்பில் 3 படங்களில் நடித்தார். அப்படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாக இருந்தாலும், ஜெயம் ரவி வழக்கம்போல் அவற்றிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய போதும் அது மிகப் பெரும் அளவில் எதிர்பார்த்த அளவு வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை.

இதனால் மாமியார் – மருமகன் என்ற உறவுக்குள் தயாரிப்பாளர் – படம் நடித்த ஹீரோ என்ற உறவு புகுந்தது.

இதன் காரணமாக வீட்டுக்குள் சற்று சலசலப்பு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மற்றொரு திரைப்படத்தில் நடிக்க ஜெயம் ரவி அதிக அளவு சம்பளம் கேட்டபோது அதை மாமியார் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

மகன் போல ரவி

ஏற்கனவே பல மேடைகளில் மாமியார் தனது மருமகனை மகன் போல பாவித்து பெருமையாக பேசி இருந்தார். ஆனால் மாமியாருக்கும் ரவிக்கும் இடையே பல மேடைகளில் புகழப்பட்ட உறவானது இந்த சலசலப்பால் சற்று விரிசல் கண்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் தயாரிப்பாளரும் மாமியாருமான சுஜாதாவின் பிஏவுக்கும் நடிகர் ஜெயம் ரவிக்கும் பல இடங்களில் உரசல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஜெயம் ரவியின் மனவருத்தம்

தனது மாமியார் குடும்பத்தினர் தனக்கு ஆதரவாக அச்சமயங்களில் பேசாததன் எதிரொலியாக நடிகர் ஜெயம்ரவி மன வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜோடியான படங்கள் நீக்கம்

இந்த நிலையில் சமீபத்தில் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார்.

அப்போதே இவர்கள் விவாகரத்து செய்யப் போவதாக ஊடகங்களில் செய்தி வெளியான போதும் இருவரும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் மௌனம் காத்தனர்.

விவாகரத்து அறிவிப்பு

இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி “ஆர்த்தி உடனான திருமண உறவில் இருந்து விலகுகிறேன்.” என அறிவித்துள்ளார்.

மனதை கனக்கச் செய்யும் கசப்பான மற்றும் சொந்த முடிவு இது என்றும் என்னைச் சார்ந்தவர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நடிகர் ஜெயம் ரவி கூறியிருந்தார்.

ஜெயம் ரவியின் பிறந்த நாளன்று அவர் குடும்ப நல நீதிமன்றத்துக்கு சென்றதாகவும் சில செய்திகள் வந்தன.

தான் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தப் போவதாகவும் தனது முடிவுக்கு மதிப்பளித்து ரசிகர்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறும் நடிகர் ஜெயம் ரவி கேட்டுக்கொண்டார்.

இது ஜெயம் ரவி தரப்பு விளக்கமாகவே உள்ளது.

மௌனம் களைத்த ஆர்த்தி ரவி

பெரும்பாலும் கோலிவுட்டில் பிரிந்த ஜோடிகள் இதுவரை கூட்டாகவே பிரிவு சம்பந்தமான அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர்.

உதாரணத்துக்கு தனுஷ்-ஐஷ்வர்யா முதல் சமீபத்தில் பிரிந்த ஜிவி பிரகாஷ்- சைந்தவி வரை அனைவரும் ஒரே நேரத்தில் ஜோடி ஜோடியாக பிரிவுகளை ஒருமித்து அறிவித்தனர்.

அவர்கள் மியூச்சுவல் டிவோர்ஸ் ஆகப் பிரிகின்றனர்.

ஆனால் ஜெயம் ரவி மட்டுமே ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்த நிலையில் ஆர்த்தி இது குறித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் அமைதி காத்து வந்தார்.

ஒருவேளை ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்க தேவையில்லை என்று கூட நினைத்திருக்கலாம் என்றே முதலில் கருதப்பட்டது.

ஆர்த்தி ரவி அறிக்கை

இந்த நிலையில்தான் ஆர்த்தி ரவி இன்று காலை ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் “ஜெயம் ரவியின் அறிக்கை ஷாக்கிங் ஆக இருக்கிறது. இது எனக்கும் எனது குழந்தைகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் தனியாக தவித்து நிற்கிறோம். ஜெயம் ரவியை பார்க்க பலமுறை முயற்சி செய்தும் அவர் பேச சம்மதிக்கவில்லை.

18 ஆண்டுகால வாழ்வில் தான் காத்த கண்ணியம் கௌரவம் தனி உரிமை ஆகியவற்றை ஒரே அறிக்கையில் நடிகர் ஜெயம் ரவி இல்லாமல் போக செய்து விட்டார்.

அந்த அறிக்கை எனக்கு வேதனை அளிக்கிறது. எதுவாக இருந்தாலும் எனது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

என்னிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ஜெயம் ரவி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.”

என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஈகோ காரணமா?

இவர்களுக்குள் 18 ஆண்டுகால மன வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகள் வந்து சென்றிருக்கலாம். ஆனால் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து முதன்முறையாக நீக்கி சர்ச்சையை கிளப்பியது ஆர்த்தி ரவியே.

இருந்தபோதிலும் நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி ரவி உடன் எடுத்த காதலர் தின புகைப்படங்கள் உட்பட அனைத்தும் ஜெயம் ரவியின் instagram பக்கத்தில் இன்று வரை உள்ளன.

“புவி ஈர்ப்பு விசை போல் நீ என்னை ஈர்க்கிறாய்!” என்று ஆர்த்தி ரவி பற்றி காதல் உருக அதில் தலைக்கும் இட்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஆர்த்தி ரவியின் புகைப்பட நீக்க சர்ச்சையின் சமயத்திலேயே ஜெயம் ரவி இந்த பிரிவு தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் தற்போது வெளியிட்டது, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் அவர்களுக்கு மனகசப்பை மேலும் அதிகமாக்கும் வகையில் ஏதேனும் சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

சில மாதங்கள் கழித்தே நடிகர் ஜெயம் ரவி தன்னிச்சையாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருப்பது ரசிகர்களை பல வகையில் யூகிக்க வைப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே ஆள் ஆளுக்கு மாற்றி மாற்றி சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது பிரிவை சொல்லாமல் சொல்லி அறிவித்து வருகின்றனர்.

பந்தம் தொடர வாய்ப்பு. . எப்படி?

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை ‘மேரிடு டு ஜெயம் ரவி’ என்பதை ஆர்த்தி ரவியும், காதலர் தினத்துக்கு மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த பதிவை ஜெயம் ரவியும் இதுவரை நீக்கவில்லை.

அதேபோல் ஜெயம் ரவி ஆர்த்திரவியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை இதுவரை நிறுத்தவும் இல்லை.

ஏற்கனவே ஜெயம் ரவி நடிகை சங்கீதா உடன் எடுத்துக்கொண்ட பேட்டி ஒன்றில் ‘ஆர்த்தி ரவி ஜெயம் ரவியை ‘குக்கூ, மிஸ் யூ!’ என செல்லமாக அழைப்பதும், ஜெயம் ரவி ‘ சொல்லுடி ‘ என உரிமையோடு பேசுவதும் காதல் ரசம் பொங்கும் உரையாடல்களாக அமைந்தது. அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சேர்ந்து வாழவே விருப்பம் என்பது போல் ஆர்த்தி ரவி வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், திகட்டாத காதல் ஜோடியான இவர்கள் தங்கள் வாழ்வில் இனி சேர்ந்து வாழவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

Facebook
Instagram
YOUTUBE