நடிகை ஸ்வர்ணமால்யா சன்டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானபோது அவர் +2 தான் படித்துக் கொண்டிருந்தார் என்றால் நம்ப முடிகிறதா?. அலைபாயுமே படத்தில் நடிகை ஷாலினிக்கு அக்காவாக நடித்திருந்தார் ஸ்வர்ணமால்யா.

இவர் பள்ளி படிக்கும் போது இருந்தே பயங்கர சுறுசுறுப்பு. இவரது துருதுருப்பான பேச்சைப் பார்த்துத்தான் இவருக்கு சன்டிவியில் இந்த வாய்ப்பும் கிடைத்தது. இளைஞர்கள் மத்தியில் பப்ளியான ஆங்கராக வலம் வந்தவர் ஸ்வர்ணமால்யா. மணி ரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் அவரது தந்தைக் கதாப்பாத்திரம் இறந்தபோது அவர் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு அருமையாக இருந்தது.

அமெரிக்க மாப்பிள்ளையைத் திருமணம் செய்துவிட்டுச் சென்ற அவர், பின்பு ஆள் அட்ரஸையே காணோம். அவரது ரசிகர்களும் அடுத்தடுத்து புதிய தொகுப்பாளினிகளின் ரசிகர்களாகிவிட்டனர். இருந்தபோதும், கல்லூரி மாணவர்களிடம் கலகலப்பாக கலந்துரையாடும் ஸ்வர்ணமால்யாவையும், அவரது கலாய்க்கும் கவுன்டர்களையும் மிஸ் செய்தே வந்தனர்.

இந்த நிலையில் தான் அவர் தனக்கு என்ன ஆனது என்பது பற்றி பேட்டி கொடுத்திருக்கிறார். அதில்,

“21 வயதில் எனக்கு திருமணம் நடந்து அதே வயதில் விவாகரத்தும் ஆகிவிட்டது. விவாகரத்திற்கான காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. திருமணத்தின் போதும், விவாகரத்தின் போதும் எனக்கு 21 வயசு. அவருக்கு 25 வயசுதான். எனவே அந்த வயதில் எது சரி?, எது தவறு? என்று எங்களுக்கு தெரியவில்லை. மெட்சூரிட்டி பற்றவில்லை. அது மட்டுமில்லாமல் இந்தியாவை விட்டு வெளிநாடு சென்ற எனக்கு அமெரிக்க வாழ்க்கை செட் ஆகவில்லை.” என்றார்.

தொடர்ந்து தனது தற்கொலை எண்ணத்தைப் பற்றியும் கூறினார். “விவாகரத்தான பிறகு என்னை விட என் பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டார்கள். நான் கஷ்டப்படக்கூடாது என்று என்னை அவர்கள் என்னை மேலும் படிக்கும்படி சொன்னார்கள். அதன் பிறகு நான் ஒரு பெரிய பிரேக் அப் சண்டையில் ஈடுபட்டிருந்தேன். அப்போது மிகுந்த மன அழுத்தத்தில்தான் நான் இருந்தேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்றும் எனக்கு எண்ணம் தோன்றியது.”

“இது எல்லாம் ஒரு வாழ்க்கையா எதற்கு இப்படி வாழுகிறோம் என்று தோன்றியது. செத்துவிடலாம் என்றே நினைத்திருந்தேன். அதன் பிறகு என் தங்கைதான் என்னை மருத்துவரிடம் அழைத்து சென்றார். எனக்கு மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்தனர். மன அழுத்தத்திற்காக இரண்டு மாதம் மருந்து எடுத்துக்கொண்டேன். இப்போது நன்றாக இருக்கிறேன்” என்றும் அந்த பேட்டியில் ஸ்வர்ணமால்யா பேசியிருக்கிறார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE