நடிகையும் முன்னாள் பிரபஞ்ச அழகியுமான, சுஷ்மிதா சென் தனக்கு இரு தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டதாக தனது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார்.

சுஷ்மிதா சென்

இதயத்தை எப்போதும் மகிழ்ச்சியாகவும் திடமாகவும் வைத்திருக்குமாறு தனது தந்தை அடிக்கடி சொல்வார் என்று நினைவு கூர்ந்தார் சுஷ்மிதா. இரு தினங்களுக்கு முன் தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகவும், ஆஞ்சியோ பிளாஸ்டி நடந்து Stent வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் தனக்கு மிகப்பெரிய இருதயம் இருப்பதாக கார்டியாலஜிஸ்ட் மருத்துவர்களும் மறு உறுதி செய்திருப்பதாக கிண்டலுடன் பதிவிட்டார்.தனக்கு உரிய நேரத்தில் உதவி, ஆக்ஷனில் இறங்கி காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தான் தனியே ஒரு போஸ்ட் போட இருப்பதாக கூறினார்.

சுஷ்மிதா சென் இன்ஸ்ட்டாகிராம்

தற்போதைய போஸ்ட் தனது ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும், தன்னை விரும்புவோருக்கும் தான் மீண்டும் வந்து விட்டேன் என்ற நல்ல செய்தியை கூறவே பதிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.  தான் நலமுடன் இருப்பதாகவும் இன்னும் கொஞ்சம் நாள் வாழ தயாராகி விட்டதாகவும் கூறி ரசிகர்கள் மீது அன்பு மழை பொழிந்துள்ளார். இதற்காக அவரது ரசிகர்களும் விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்து கூறி வருகின்றனர்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE