விஜய் டிவியில் டேன்ஸ் நிகழ்ச்சியில் இருந்து தோல்வியடைந்து வெளியேறிய சாய் பல்லவியை பலரும் மறந்தே போயிருப்பர். ஆனால், அவரது இயற்கையான அழகும், கிரேஸ்ஃபுல்லான டான்சும் பிரேமம் படத்தில் கச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் பின் அவர் உச்ச நட்சத்திரமாகி விட்டார்.

மேக்கப் போடாமல் மிக அழகாக இருக்கும் நடிகைகளின் ஒருவர் சாய் பல்லவி. மிகவும் இயற்கையாகவே அவரது நடிப்பு அமைந்திருந்ததால் பிரேமம் படம் மெகா ஹிட் அடித்தது.

யாருமே எதிர்பாத்திடாத வெற்றி. மலர் டீச்சரை பலரும் கொண்டாடினர்.

இதை அடுத்து பல தமிழ் படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் சாய்பல்லவி. தற்போது அவரது அடுத்த படத்துக்கான பூஜை நடைபெற்ற சந்தோஷத்தில் இருந்தார். ஆனால் சமூக வலைதள பக்கங்கள் சில அவரது மகிழ்ச்சியை கெடுத்து விட்டன.

சாய் பல்லவி ஃபேன்டம் என்ற பக்கத்தில், ஒரு வழியாக சாய் பல்லவிக்கு திருமணமாகி விட்டதாகவும் அவர் நிறம் பார்க்காமல் காதலித்து ஒருவரை திருமணம் செய்து கொண்டமைக்காக தலை வணங்குவதாகவும் கூறி மாலையும் கழுத்துமாக ஒரு இயக்குனரோடு நிற்பது போல் புகைப்படம் வெளியானது.

இதை அடுத்து, ரசிகர்களும் தங்களது ஆஸ்தான நாயகிக்கு திருமணம் முடிந்து விட்டதாகவே கருதி திருமண வாழ்த்துக்களை பொழிந்து தள்ளினர்.

இதில் சாய் பல்லவியும் மாப்பிள்ளை போன்ற தோற்றத்தில் உடன் நிற்கும் அந்த இயக்குனரும் ஒரே நிறத்தில் ஆடையும் அணிந்திருந்தனர். மாலையும் கழுத்துமாக புகைப்படம் இருந்ததால், இதை திருமண புகைப்படமாகவே நினைத்து சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரப்பி விட்டனர்.

வீட்டுக்கு தெரியாமல் இருவரும் காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்பட்டது

யார் அந்த நபர்?

சாய்பல்லவி திருமணம் செய்து கொண்டதாக கூறப்பப்பட்ட நபர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆவார். இவர் சிவகார்த்திகேயன் 21-வது படத்தை இயக்குகிறார். அந்த படத்தில் சாய் பல்லவியும் நடிக்கிறார். படத்துக்கான பூஜை விழாவில் நடிகர், நடிகைகள், இயக்குனர் உள்ளிட்ட அனைவருக்கும் மாலை போடப்பட்டது. இருவரும் அருகருகே ஒரே நிற ஆடையோடு மாலையும் கழுத்துமாக நின்றதால் அவர்கள் இருவர் மட்டும் இருந்த புகைப்படத்தை வெட்டி திருமணம் ஆகி விட்டதாக சிலர் வதந்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர்.

சாய் பல்லவி பதிலடி

வதந்தி பற்றி அறிந்ததும் சாய்பல்லவி பட பூஜைக்கான புகைப்படத்தை வெளியிட்டு தனது பதிலடியையும் அதில் பதிவிற்கு உள்ளார்.

“நான் பொதுவாக வதந்திகள் பற்றி பெரிதும் கண்டுகொள்ள மாட்டேன்.
ஆனால், அதுவே என் நண்பர்கள் உறவினர்களை உள்ளடக்கி வரும்போது நான் பேசியாக வேண்டும்.
எனது புதிய படத்தின் பூஜையின் போது எடுத்த புகைப்படத்தை பணம் கொடுத்து அருவெறுக்கத்தக்க நோக்கத்துடன் பரப்புகின்றனர்.
நான் எனது புதிய படம் குறித்து சந்தோசமான அறிவிப்பை வெளியிடும் சமயத்தில்,
இப்படி வேலை இல்லாதவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டி இருப்பது வேதனை அளிக்கிறது.
இதுபோன்ற அசௌகரியத்தை ஏற்படுத்தும் செயலை செய்வது மிகவும் மோசமான ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் மிகவும் டீசன்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. அவரைப் போய் இப்படி சித்தரித்து வெளியிட்டு விட்டதாக அவரது ரசிகர்களும் கோபத்தில் கமென்ட்களை தட்டி விட்டு வருகின்றனர்.

“யார்ரா நீங்க? எங்க இருந்துடா வரீங்க? உங்களுக்கெல்லாம் காசு கிடைச்சா எப்படி வேணா சித்தரித்து விட்ருவீங்களா? நிஜமாவே உங்களுக்கு வேலை இல்லையா? என்றெல்லாம் நெகட்டிவிட்டிக்கு பதில் அளித்து வருகின்றனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE