நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தியும், நடிகர் பிரபுவின் இளைய மகளும், நடிகர் விக்ரம் பிரபுவின் சகோதரிமான ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில் திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் திருமணம் நடைபெற்றது.

சிவாஜி வீட்டு விசேஷம், பிரபு வீட்டு விசேஷம் எனக் கூறி திரை உலகில் இருந்து பெரும்பாலானோர் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நட்சத்திர பட்டாளத்தின் வாழ்த்து மழையும் இவர்களுக்கு அதிகம் இருந்தது.

நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் பிரபுவின் சகோதரி தேன் குழலியின் மகனான குணாலுக்கும் ஏற்கனவே திருமணம் ஆனதுதான். ஆனால் சொத்து பிரிப்பு பிரச்சனை காரணமாக தம்பதி இருவரும் பிரிந்து விட்டனர்.

ஐஸ்வர்யாவுக்கும் குணாலுக்கும் நடந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

இதை அடுத்து ஐஸ்வர்யாவுக்கு 2-ம் திருமணம் செய்து வைக்க பிரபுவின் குடும்பத்தார் பலமுறை முயற்சித்த போதும் அவர் அதனை மறுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யாவின் மனதை மாற்றும் வகையில் பேசிய அவரது குடும்பத்தினர் 40 வயதைக் கடந்துவிட்ட பின்பு திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர்.

ஐஸ்வர்யாவுக்கு வாழ்க்கைத் துணையாகவும் தனக்கு மாப்பிள்ளையாகவும் பிரபு தேர்ந்தெடுத்த நபர் தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

1980ல் பிறந்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சினிமாத்துறை என்றால் மிகவும் விருப்பம் கல்லூரியிலேயே விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க நினைத்தார் ஆனால் அவரது தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனது விருப்பம் போல் திரைத்துறையில் நுழைந்தார்.

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் எழுத்தாளராகவும் இயக்குனராகவும் அறிமுகமானார். இதை அடுத்து சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தையும் எழுதி இயக்கினார்.

சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்த படத்தை எழுதி இயக்கிய இவர் திரையுலகில் அதிக பாராட்டுக்களை வென்று புகழ் பெற்றார். அந்தப் படத்தில் ஐ லவ் யூ டி என்ற பாடலையும் அவர் பாடியிருக்கிறார்.

இவரைத்தான் தனது மாப்பிள்ளையாக நடிகர் பிரபு தேர்ந்தெடுத்திருக்கிறார்.

திருமணத்தை பிரம்மாண்டமாக செய்ய பிரபு நினைத்ததாகவும் ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் குடும்பத்தினர் சிம்பிளாக செய்து கொள்ளலாம் என விரும்பியதாகவும் சொல்லப்படுகிறது.

அத்துடன் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள சுமார் 500 கோடி ரூபாய் வரதட்சணையாக பிரபு தரப்பில் கொடுத்திருக்கலாம் என்றும் பிரபல சினிமா விமர்சகரான செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பதிலளித்துள்ள பிரபு, “ஏற்கனவே குடுமபத்துல சொத்து பிரச்னை. இதுல இது வேற. நான் 500 கோடியை எல்லாரும் முன்னாடி பத்திரப்பதிவு செய்து கொடுத்தது போல பேசுறாங்க. அந்த மாதிரிலாம் கிடையாது” என்று கூறியதாக பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE