பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் சீரியல விட்டு போறாரா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் கதிர் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறவர் குமரன். இவர் சினிமால நடிக்கணும் அப்படிங்கற ஆர்வத்துல நடிக்க வந்தாரு ஆனால் வாய்ப்பு கிடைக்காம, சீரியல்ல நடிச்சிட்டு இருந்தாரு. சமீபத்தில் வெளியான வதந்தி அப்படிங்கிற ஒரு வெப் சீரிஸ்ல எஸ் ஜே சூர்யா கூட நடித்திருந்தார். அந்த சீரீஸ்-ல சிறப்பான நடிப்ப வெளிப்படுத்தி இருந்தாரு குமரன்.

எஸ்.ஜே.சூர்யா, குமரன்

இதையடுத்து ஹங்காமா என்ற ஓடிடி தளத்தின் தயாரிப்பில் மாயத் தோட்டா என்கிற வெப் சீரீஸ் உருவாகியுள்ளது. அதில் லீட் ரோலிவ் நடித்துள்ளார் குமரன். தமிழில் முதன் முறையாக வெப்சீரீஸ் தயாரிக்கும் ஹங்காமா மாயத்தோட்டா-வை 6 எபிசோடுகளாக வெளியிடுகிறது. இதுல Z பிரிவு சீஃப் ஆபிஸரா நடிச்சி இருக்கிறதாகவும், அதற்கேற்ப ஹேர் கட் செய்து உடலை குறைத்ததோடு அவர்கள் ஆயுதங்களை கையாளும் விதம் உள்ளிட்டவற்றை ஹோம் வொர்க் செய்து கத்துக்கிட்டதாகவும் சொல்லி இருக்காரு.

,குமரன்

ஓ டி டி வெப் சீரியஸ்களில் அதிக வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல கைவிட வேண்டிய சூழல் வருமோ அப்படிங்கற ஒரு சந்தேகம் எழுந்தது. இந்தநிலையில் தான் வெப்சீரீஸ்-ல நடிக்கிறதுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் டீமும் முழு ஒத்துழைப்பு தரதா குமரன் சொல்லி இருக்காரு. இதனால பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் முடிஞ்ச அப்புறம் தான் அவர் முழு ஈடுபாட்டோட வெப் சீரிஸ் பக்கம் நகர்வாரு அப்படின்னும் சொல்லப்படுது.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE