சர்ச்சை பேச்சு தான் விலகலுக்கு காரணமா பாண்டியன் ஸ்டோர்ஸ் ரிஹானா?

2018 அக்டோபர் மாதம் தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் இது ஒரு சகோதரர்களின் கதை எனக்கூறி வந்தது. அது பெரும்பாலும் நெகட்டிவ் இல்லாத கதாபாத்திரங்களை கொண்டு மக்கள் மத்தியில் இடம் பிடித்தது.

இறுதியில் பல நெகட்டிவிட்டிகளை உள்ளே புகுத்தி, ஒரு கிளைமாக்ஸ் வைத்து இது எப்போது முடியும் என்பது போன்ற பேச்சு அடிபட்டதும் அந்த தொடருக்கு சுபம் போட்டார் இயக்குனர். ஆனால், அந்த தொடர் முடிவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வது பாகம் பற்றிய ப்ரோமோ வெளிவந்தது. அதில், மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த அதே நடிகரும் தனம் கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு பதிலாக நடிகை நிரோஷாவும் நடிப்பதாக தெரியவந்தது.

முந்தைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களுக்கு இடையேயான பாசம் பற்றியது என்றால் தற்போது உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் பாகம் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற டாக் லைனுக்கு ஏற்ப ஒளிபரப்பாகி வருகிறது.

5 பிள்ளைகள் பெற்ற ஒரு குடும்பத்தின் கதை, அவர்களுடைய பிள்ளைகளின் திருமணங்கள் என சமீபத்தில் அடுத்தடுத்து விறுவிறுப்பான காட்சிகளாக கதை நகர்ந்து வரும் வேளையில், ராஜி என்ற கதாபாத்திரத்தின் சித்தியாக வரும் மாரி என்ற கதாபாத்திரத்தில் வருபவர் மாற்றப்பட்டுள்ளார்.

மாரியாக நடித்துவந்த ரிஹானா ஏற்கனவே சின்னத்திரை நடிகர்களுக்குள் ஏதேனும் சர்ச்சையான பேச்சுக்கள் வந்தால், அவர் ஒரு தரப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வந்தார். அவரது சில கருத்துக்களும் சர்ச்சையாக வந்து முடிந்தது.

இந்த நிலையில் ரிஹானாவுக்கு பதிலாக மாரி கதாபாத்திரத்தில் சன் டிவியில் இனியா என்ற நாடகத்தில் வில்லியாக நடித்து வந்த மாதவி மாற்றப்பட்டுள்ளார்.

ஒருவேளை பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் 2 செட்டுக்குள் ஏதேனும் கருத்து கூறி அதனால் ரிஹானா வெளியேற்றப்பட்டாரா? என்ற சர்ச்சை எழுந்த நிலையில் அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ரிஹானா ஒரு கருத்தை கூறியுள்ளார்.

ரசிகர்கள் பலரும் ஏன் விலகினீர்கள்? என்று கேட்பதாகவும் நானும் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை மிகவும் மிஸ் செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிப்பில் இருந்து சிறிது பிரேக் என்று அவர் கூறியிருப்பதால் ஏதேனும் உடல்நல குறைபாடு இருக்கலாம் என்றும் சினிமா வாய்ப்பாக இருக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது.

நீங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் பாகம் பார்ப்பவராக இருந்தீர்கள் என்றால் மாரி கதாபாத்திரத்திற்கு புதிதாக வந்த மாதவி சரியாக இருப்பாரா? அல்லது ரிஹானா சரியாக இருப்பாரா என கமெண்ட் செய்யவும்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE