என்னப்பா இப்டி பண்ணிட்ட? அட்லியால் அப்செட் ஆன நயன்?

ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. ஆனால் அந்த படத்தில் ஹீரோயின் எனக் கூறி நடிக்க அழைத்துவிட்டு, தீபிகா படுகோனே நடித்த காட்சிகளை அதிகம் பயன்படுத்தி இருந்ததாகவும், தான் நடித்த காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்றும் நயன்தாரா இயக்குனர் அட்லி மீது அப்சட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடித்த ராஜா ராணி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர் அட்லீ.

இயக்குனர் அட்லீயும் நயன்தாராவும் நல்ல நண்பர்கள் என்று சொல்லும் அளவு பல படங்களில் இணைந்து பணியாற்றினர். இயக்குனர் அட்லிக்கு ஹிந்தி திரைப்படத்தில், அதுவும் ஷாருக்கானை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அவர் ஷாரூக்குக்கு பரிந்துரைத்த ஹீரோயின்கூட நயன்தாரா தான்.

இதனை நடிகர் ஷாருக்கானும் முழு மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். ஜவான் படத்தில் விஜய் சேதுபதி பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படத்தில் முக்கிய கதாபாத்திரம் நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டாலும், ஷாருக்கானின் மனைவி கதாபாத்திரத்தில் அதாவது முக்கியமான ஹீரோயின் போன்ற கதாப்பத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்க வைக்கப்பட்டிருந்தார். இது ஷாருக்-தீபிகா படமாகவே ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சில கருத்துக்களும் உலவின. அது மட்டுமின்றி நயன்தாரா நடித்த முக்கியமான காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டு விட்டனவாம்.

இதனால் இந்தி திரைத்துறையில் தான் ஒதுக்கப்பட்டதாகவும், அட்லீயே இப்படி செய்து விட்டாரே என்றும் நடிகை நயன்தாரா அப்செட்டில் இருந்ததாக பல தகவல்கள் பரவின.

இதனால்தான் ஜவான் படத்தில் பிரமோஷனுக்கு கூட நயன்தாரா வரவில்லை என்றும் தனது குழந்தைகளுடன் அந்த நேரத்தில் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்து இருந்ததாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி முகேஷ் அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அழைக்கப்பட்டபோது நடிகர் நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும், அட்லி பிரியா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பணக்காரரான முகேஷ் அம்பானி அழைத்ததும் மட்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு சென்று விட்டார்.

ஆனால் பட புரமோஷனுக்கு என்றதும் செல்லவில்லை என்ற விமர்சனங்களும் நயன்தாரா மீது எழுந்தன. இந்த நிலையில் ஏற்கனவே நயன்தாராவின் பாலிசி பற்றி தற்போது தகவல் மீண்டும் வெளியாகியுள்ளது. அதன்படி நடிப்பது மட்டுமே தனது பணி எனக் கொண்டுள்ள நயன்தாரா, இதந்கு முன் பல கசப்பான அனுபவங்களை கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்று கூறப்பட்டது. அதனால்தான் ஜவான் பட புரமோஷன் நடிகை நயன்தாரா கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

அட்லீயுடன் அப்சட்டா?

இயக்குனர் அட்லி உடன் நடிகை நயன்தாரா, அப்செட் ஆக இருப்பதாகவும், இனி எந்த வித ஹிந்தி படங்களிலும் நடிகை நயன்தாரா நடிக்கப் போவதில்லை என்றும் தகவல் பரவியது. இந்த நிலையில் அட்லியின் பிறந்தநாளுக்கு அவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ள நயன்தாரா வாழ்த்துக்களை கூறி, வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

”Happy Birthday Atlee, So proud of you” என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேடஸ் மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் நயன்தாரா.

இந்த வாழ்த்து செய்தி மூலம் ஏற்கனவே இவர்களுக்குள் அப்செட் இருப்பதாகவும் இனி நயன்தாரா அட்லியுடன் படம் நடிக்க மாட்டார் என்றும் வந்த தகவல்கள் வதந்தி என்பதை, அவருடன் பணியாற்றிய புகைப்படத்தை வெளியிட்டு சொல்லாமல் சொல்லியுள்ளார் நயன்தாரா.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE