மீனா அப்பா ஜனார்த்தனன் கொலை, ஜீவா-கதிர் கைது

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் படுகொலை செய்யப்பட பழி ஜீவாவின் மீது விழுகிறது. இதுதான் இந்த வார பிரமோவாக விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

நெகட்டிவிட்டி இல்லாத நாடகம் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ், தற்போது அடுத்தடுத்து நெகட்டிவ் காட்சிகளை காண்பித்து வருகிறது.

பொதுவாக பிரச்சனைக்கு மேல் பிரச்சனை என வரும் நாடகங்களை பார்த்து பார்த்து சலித்து போனவர்கள் அல்லது நாடகங்களை பார்க்க விரும்பாதவர்கள் கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தை விரும்பி பார்த்து வந்தனர். ஆனால் தற்போது பிரச்சனைகள் ஒன்று முடியும் முன்பு இரண்டு வரிசை கட்டி வந்த நிற்கும் வகையில் உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில்.

தாய் மரணம், குழந்தை கிடைக்காது போகும் என கணிப்பு, கட்டிய சூப்பர் மார்க்கெட் கைவிட்டுப் போவது, வேலை பறிபோவது, அடிதடி, சிறை செல்வது, கேன்சர் நோய் என சமீபத்தில் அடுத்தடுத்த பிரச்சினைகள் இந்த நாடக கதாபாத்திரங்களுக்கு வந்தபடியே இருந்தன.

அந்த வகையில் புதிதாக தற்போது மீனாவின் அப்பா ஜனார்த்தனன் கொலை செய்யப்படுகிறார்.

ஏற்கனவே ஏமாறப்போகும் ஒரு தொழிலை நம்பி பணம் போட வேண்டாம் என ஜீவா ஜனார்த்தனனை எச்சரித்தே வர, வேண்டுமென்றேதான் அவரை இந்த தொழிலில் சிக்க வைப்பதாகவும் மொத்த சொத்தையும் தான் எடுத்துக் கொள்ளப் போவதாகவும் பிரசாந்த் கூறியிருந்தார்.

முன்னதாக ஜீவா மற்றும் கதிர் ஆகியோருடன் சண்டையும் கட்டிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஏதோ தவறாக தெரிகிறது என்று சிறிய மாப்பிள்ளை பிரசாந்த்தை அழைத்து ஜனார்த்தனன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேனேஜர் ஏதோ வார்த்தையை விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த் அவரை பிடித்து கீழே தள்ள, அவர் அருகில் அங்கு இருந்த கல்லில் சென்று விழுகிறார். இதில் தலையில் பலத்த அடிபட்ட மேனேஜர் அங்கேயே மரணம் அடைகிறார்.

ஆத்திரமடைந்த ஜனார்த்தனன் அருகில் கிடந்த கத்தியை எடுத்துக்கொண்டு பிரசாந்த்தை தாக்க செல்கிறார். ஆனால் பிரசாந்த் சுதாரித்துக் கொண்டு ஜனார்த்தனனை அதே கத்தியால் தாக்கி கொன்று விட்டு, பழியை ஜீவா மற்றும் கதிர் மீது போடுகிறார்

இதனால் வேறு வழி இன்றி ஜீவாவும் கதிரும் கைதாகுகின்றனர்.

ஜீவா கைதாகும்போது கூட மீனா தடுக்கவில்லை. காரணம் தனது தந்தை இறந்த மரணச் செய்தி கேட்டு ஷாக்காகி நிற்கிறார். இதுதான் இந்த வாரத்துக்கு பிரமோவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

அடுத்த அடுத்த பரபரப்பான திருப்பங்கள் இருந்தாலும் கூட, பாண்டியன் ஸ்டோர்ஸ் பாசிட்டிவிட்டியை முன்வைத்து காய் நகர்த்தி நேயர்களைப் பிடித்துவிட்டு தற்போது வழக்கமான எல்லா நாடகங்களைப் போன்று அழுகாச்சி காட்சியாக சீரியலை ஓட்டிக் கொண்டிருப்பதாக ஒரு விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE