நாடு முழுவதும் மக்கள் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு காரணம் மணிப்பூரைச் சேர்ந்த ஆண்கள் கூட்டம். இரு பழங்குடியின பெண்களை முற்றிலும் நிர்வாகம் ஆக்கி ஒரு ஆண்கள் கூட்டமே அழைத்துச் சென்று வயல்வெளியில் வைத்து மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் கடந்த மே மாதம் 4-ம் தேதி நடந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களை 70 நாட்களுக்கும் மேலாக கைது செய்யாதது ஏன்? என அனைத்து தரப்பு மக்களும் கடும் மனக் கொந்தளிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

வீடியோவில் இருந்தது என்ன?

மைத்தேயி என்ற இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணம் ஆக்கினர். அவர்களை ஏராளமான ஆண்கள் ஒன்று சேர்ந்து நிர்வாண ஊர்வலமாக அழைத்து செல்வது அந்த காட்சியில் பதிவாகியுள்ளது. நடந்து செல்லும் போதே பெண்களுக்கு மிகக் கேவலமான அறுவறுக்கத்தக்க சில ஆபாச சீண்டல்களை செய்து கொண்டே அந்த இளைஞர்கள் வருகின்றனர். கைகளை உதற முயன்றும் முடியாமல் மிருகங்களின் கூட்டத்துக்குள் சிக்கிய மான்களைப் போல அழுதபடியே கெஞ்சி வருகின்றனர். பெண்கள் பழங்குடியினத்தில் பிறந்து விட்டனர் என்ற ஒரு காரணத்திற்காக இனக்கலவரத்தில் பலிக்கடா ஆக்கப்பட்டனர். இவர்கள் வயல் வெளியை அடைந்ததும் அந்த கும்பல் அவர்களை நெல் வயலுக்குள் தள்ளிச் செல்கிறது. இதை அடுத்து அங்கிருந்த ஆண்கள் அவர்களை மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

வைரலான வீடியோ

இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து மக்கள் கொந்தளித்து போய் உள்ளனர். இது மிகவும் கொடூரமான செயல் என்றும் வீடியோ தற்போதுதான் வைரலானாலும் 70 நாட்களுக்கும் மேலாக போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர்? என்று ஆதங்கத்துடன் கேள்வி கேட்போரின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகமாகிறது.

நாடே வெட்கி தலை குனிந்து சம்பவம் இது என்றும் அரசாங்கம் என்னதான் செய்து கொண்டிருந்தது? ஏன் அந்த முதல்வரை மாற்றவில்லை? என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைமைகள் குமுறிக் கொண்டிருக்கின்றன. பாரதமாதாவுக்கே தலைகுனிவு வந்து விட்டதாக இதயத்தை கனக்க செய்யும் கொடூரங்கள் மணிபூரில் நடப்பது மிக துரதிஷ்டவசமானது என்று பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஊர் எல்லையை தாண்டி வரும் வரை போலீசாரே பாதுகாப்புக்கு நின்றதாகவும் அதன் பின் அவர்கள் விலகிக் கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஒருவேளை போலீசாரும் உடந்தையா என்று விசாரணை நடைபெறுகிறது. தங்களை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலில் தங்களது சகோதரரின் நண்பரும் இருந்ததாக பெண்கள் வேதனையோடு தெரிவித்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்னதான் பிரச்சனை?

மணிப்பூரில் கடந்த மே மாதம் ஆரம்பத்தில் இருந்து மைத்தேயி மற்றும் குக்கி இனத்தினர் இடையே வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையின் ஒரு பகுதியாகதான் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அது குறித்த வீடியோ தற்போது வைரலானதால் தான் பெண்களை பெற்றோர் பதை பதைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE