நடிகர் மாதவன் முதன்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியும், அதில் பங்கேற்பது பற்றியும் மனம் திறந்து பேசி உள்ளார்.

அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் உச்சம் தொட்டவர் மாதவன். அவர் மணிரத்தினம் உடன் சேர்ந்து நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆக அமைந்தன.

சாக்லேட் பாய் என செல்லமாக அழைக்கப்பட்ட மாதவன் நடிகர் மட்டுமல்ல. ஒரு எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை தனக்குள் வைத்துள்ளார். ஒரு தேசிய திரைப்பட விருது, 4 ஃபிலிம் ஃபேர் விருதுகள் மற்றும் தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர் மாதவன். தற்போது புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவராகவும் பணியாற்றுகிறார் மாதவன்.

அலைபாயுதே மட்டுமின்றி மின்னலே, டும் டும் டும் போன்ற திரைப்படங்களில் நடித்த இவர் கன்னத்தில் முத்தமிட்டால், ரன், ஜே ஜே, எதிரி போன்ற திரைப்படங்கள் மூலமாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியவர்.

அதிலும் குறிப்பாக தம்பி படத்தில் அவர் நடித்த விதம் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே, 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அவர் சினிமாவில் பெரிய அளவில் நாட்டம் காட்டாமல் ஓய்விலேயே இருந்தால் மீண்டும் தன்னுடைய பயணத்தை செகண்ட் இன்னிங்ஸ் போல இறுதிச் சுற்று, விக்ரம் வேதா என தொடங்கி இருக்கிறார்.

மாதவன் சமீபத்திய பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார். அன்பாசிவம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்தது தனது வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூறியுள்ளார்.

னெனில் அவர் கமல் சாரின் தீவிர பக்தர் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். “நான் கமல் சாரோட ரசிகர் மட்டும் இல்ல பக்தர்னே சொல்லலாம். ஏன்னா நான் கமல் சார் வீட்டுக்கு போயிருக்கேன். அவர் காலைல எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்குற வரைக்கும் சினிமா பத்தி யோசிக்க கூடியவர். அவருக்கு வேற எந்த இன்ட்ரஸ்ட் கிடையாது. எந்த கமிட்மென்ட்டும் கிடையாது. எப்போதுமே கமல் சார் சினிமாவுக்கு என்று தன்னோட சிந்தனைகளை முழுவதும் செலவழிக்க கூடியவர். அவர பத்தி யோசிக்கவே பெருமையா இருக்கு. அவர் கூட நான் இருந்தேன், பேசிக்கிட்டு இருந்தேன், அவர் கூட நடிச்சிருக்கேன் என்பதெல்லாம் நினைக்கும் போது எனக்கு இன்னும் மகிழ்ச்சியா இருக்கு” என்று கூறியிருந்தார் மாதவன்.

அப்போது மாதவனிடம் நீங்கள் ஹிந்தியிலும் நடித்திருக்கிறீர்கள், தமிழிலும் நடித்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு பிடித்தமான ஆசான் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

முதலில் நான் இதுவரைக்கும் பிக் பாஸ் எபிசோடு பார்த்தது கிடையாது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதற்கு ஒரு மனநிலை இருக்க வேண்டும். அந்த மனநிலை எனக்கு கிடையாது என்பது வேண்டுமானால் எனக்கு தெளிவாக தெரியும். அப்படி ஒருவேளை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்ல வாய்ப்பு கிடைத்தால் கமல் சார், மணி சார், சூர்யா, சீமான் என 4 பேரை நான் கூட்டிக் கொண்டு போவேன் என்று அந்த பேட்டியில் மாதவன் கூறியிருக்கிறார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE