பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த முறை 2 வீடு என கமலே ரிவீல் செய்துவிட்டார். அதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 2-வது வீடு ஒரு ஹாரர் ஹவுஸ் அல்லது ஸ்கேரி ஹவுஸ் ஆக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

முதல் சீசன் முதல் தொடங்கிய பரபரப்பு, 7 சீசன் வரை பிரத்யேக ரசிகர்களை அந்த நிகழ்ச்சிக்காக காக்க வைத்திருக்கிறது. சீசனில் இறுதிக்கட்டம் நெருங்க நெருங்க வீடுகளுக்குள் ஒருவருக் கொருவர் அதிகம் பேசிக்கொள்ளாத நபர் கூட வாய்திறந்து வெளிப்படையாகக் கருத்தைக் கூறச் செய்து விடும்

எதனால் ஹிட்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாழ்வியலையும் மனித இயல்புகள் எந்த நேரத்தில் எப்படி மாறும் என்பதையும் காட்டுவதால்தான், ஒருவர் தன்னைத்தானே திரையில் பார்ப்பதாக எண்ணி அந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார். எனவே, ரிலேடபிலிடி என்ற நிலை இந்த நிகழ்ச்சியில் அதிகம்.

ரகசியம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள், தங்கள் குடும்பத்தைத் தவிர வேறு யாருடனும் இதுபற்றி வெளியே கூறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு விடுவார்கள். அந்த கான்ட்ரேக்ட் பேப்பரிலேயே உள்ள டர்ம்ஸ் அண்ட் கன்டிஷனில் இதுபற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும். இருப்பினும் இந்த முறை யாரெல்லாம் இதில் பங்கேற்கிறார்கள் என்ற கணிப்பானது புரமோ வெளியிடப்படும் நாள் முதல் கசிந்துவரும்.

இந்த முறை கணிப்பில் யார் யார்?

கதிர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் உள்ள கதிர் என்ற குமரன் தங்கராஜன் என்பவர் இந்த சீசன் பிக்பாஸில் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம். இந்த நிலையில் ஆண்கள் பிரிவு கிரஷ் மெடீரியலாக குமரன் இருக்க வாய்ப்புள்ளது.

கதிர் கொடுத்த ஹின்ட்

இன்ஸ்டாகிராமில் குமரன் தங்கராஜன் என்ற பெயரில் உள்ள அவரது கணக்கில் ஒரு வாரத்துக்கு முன்னாள் தனது கையெழுத்திட்ட ஒரு லெட்டரை பகிர்ந்துள்ளார். அதில் சிறிது காலத்துக்கு சோசியல் மீடியா டயட்டில் இருக்கப்போவதாகவும், இனிமேல் தனது அட்மின்தான் பார்த்துக் கொள்வார் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீதிவ்யா

ஊதா கலரு ரிப்பன் புகழ் ஸ்ரீதிவ்யா, இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாம். பிக்பாஸில் ஏற்கெனவே வந்த சீசன்களில் நடிகைகள் பங்கேற்று இருப்பார்கள். அதுவும் பரபரப்பாக நடிப்பில் பிசியாக இல்லாத நடிகைகள் ஒருவர் இருப்பார். ஏற்கெனவே வந்த ஓவியா போன்று ஸ்ரீதிவ்யா இதில் வரக்கூடும் என கணிக்கப்படுகிறது.

அப்பாஸ்

ஏற்கெனவே பிக்பாஸில் முன்னாள் பிரபல நடிகர் பங்கேற்பார். அந்த பிரிவில் இந்த முறை அப்பாஸ் வருவார் எனக் கூறப்படுகிறது.

எக்ஸ் கேட்டகிரி

செட்டே ஆகாது என வாழ்க்கையில் பிரிந்து போன இருவரை அழைத்து ஒரே வீட்டுக்குள் நடமாட விட்டு நடப்பதை வேடிக்கை பார்ப்பது பிக்பாஸ்-க்கு வழக்கம். அந்த பிரிவில் தாடி பாலாஜி – நித்யா, யாஷிகா ஆனந்தின் முன்னாள் பாய்ஃபிரண்ட் நிரூப்- யாஷிகா நண்பன் பாலாஜி முருகதாஸ் போன்றோர் பங்கேற்றனர். அந்த வகையில் இந்த முறை சின்னத்திரை அமுல் பேபி விஷ்ணுவும் – சத்யா சீரியலில் நடித்த அவரது முன்னாள் காதலி ஆயிஷாவும் இந்த முறை பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்புள்ளதாம்.

பிறர் யார்?

தர்ஷா குப்தா, பப்ளூ, சோனியா அகர்வால், கௌசல்யா, தினேஷ், ஸ்ரீதேவி, விஜே ரக்ஷ்ன், ஜாக்குலின், குரேஷி, அம்மு அபிராமி ஆகீயோர் இதிர் பங்கேற்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE