பெரும்பாலும் தினமும் காலை எழுந்ததும் சுடு தண்ணீர் குடிப்பதன் மூலம் பல்வேறு நல்ல பலன்கள் விளைகின்றன. அவை என்னென்ன என்பதை முதலில் பார்த்துவிட்டு சுடு தண்ணீர் குடிப்பதால் இருக்கும் ஆபத்து என்ன? என்பதை பின்னர் பார்க்கலாம்.

சுடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்

தண்ணீர் உடலுக்குத் தேவையான ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து.

சூடான நீரை காலை எழுந்ததும் குடிப்பது பல்வேறு பலன்களை தரும்.

அதாவது செரிமானத்துக்கு உதவும்

ரத்த ஓட்டத்துக்கு உதவும்

ஸ்ட்ரெஸ் என்ற மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

எப்போதும் உடலில் நீர்ச்சத்தோடு இருக்க உதவும்

உடல் எடை குறைக்க உதவும்

உடலில் உள்ள விஷத்தன்மையை மலம் மூலம் வெளியேற்ற உதவும்

மலச்சிக்கலை நீக்கும்

ரிலாக்ஸாக உடல் அமைவதற்கு உதவும்

குடல் சார்ந்த பிரச்சினைகள் ஏதும் இருந்தால் அதனை தீர்க்கும்

செரிமானத்தை எளிதாக்கும்

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்

கொழுப்பை கரைக்கும்

இவை அனைத்துமே காலை எழுந்ததும் குடிக்கும் சுடுதண்ணீரால் கிடைக்கும் பலன்கள் என கூறப்படுகிறது. ஆனால் அதிகாலை எழுந்ததும் மட்டுமின்றி ஒரு சிலர், எடைதான் குறைகிறதே என நாள் முழுக்க சுடுதண்ணீரை குடித்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்? என்பதை தற்போது பார்க்கலாம்.

இது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் பெரிதளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சில அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

என்ன விளைவு?

Esophagus என்ற திசுக்களை டேமேஜ் செய்யக்கூடும்.

உங்களது “டேஸ்ட் பட்“ என்ற சுவைக்கும் திறனை உணரக்கூடிய தன்மையை அது குறைக்கும்.

நாக்கை புண்ணாக்கும்.

எந்த சூட்டில் பருக வேண்டும்?

சுடுதண்ணீராக இருக்கட்டும் அல்லது காபி டீ போன்ற சூடான பானங்களாக இருக்கட்டும். அதை கொதிக்க கொதிக்க அப்படியே அடுப்பில் இருந்து இறக்கியதும் சிலர் எடுத்து பருகுவார்கள். அவ்வளவு சூடாக ஒரு மனிதர் எதையும் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். சுடுதண்ணீர் குடிப்பதால் பலன் இருப்பதால் எப்படியும் சுடு தண்ணீர் பிடிக்காதவர் கூட தனது உடல் நிலையை விட சற்று லேசான அதிக சூட்டில் சுடு தண்ணீர் பருகலாம்.

ஆனால் சுடுதண்ணீரை அல்லது சூடான டீ, காபி பருக விரும்புபவர்கள் 57.8 டிகிரி செல்சியஸ்-ஐ விட அதிகமான சூட்டில் எதையும் பருக கூடாது என்று எச்சரிக்கின்றனர். இவ்வளவு அளவான டெம்பரேச்சரில் சுடு தண்ணீரோ, பானமோ பருகும் போது அது ஒரு சூடான பானம் குடிப்பதற்கான திருப்தியை கொடுக்கும். இதற்கு அதிகமாக சென்றால் அது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.

ஹார்வர்ட் ஹெல்த் என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பல்வேறு முறைகள் உள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆரோக்கியமான உணவு பழக்கம் இவற்றைக் கொண்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?

போதிய அளவு தண்ணீர் பருகி வந்தாலே உடல் சீராக இருக்கும்

ஹெல்தி டயட்

பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள், விதைகள் உள்ளிட்டவற்றை தினம் தோறும் அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிகரித்து உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும்.

உடற்பயிற்சி

அதீதமான உடற்பயிற்சி இல்லாமல் சாதாரணமான உடற்பயிற்சி எப்போதுமே இம்யூனிட்டி என்ற நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவும்.

தூக்கம்

நல்ல தூக்கமானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று பல நிபுணர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் சரியான தூக்கம் இன்மை ஒருவரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி அவருக்கு எந்த நோயையும் எளிதில் வர வைத்து விடும் என்று அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

மன அழுத்தம்

மன அழுத்தத்தை குறைப்பது என்பதும் ஒருவரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிக நாட்கள் மன அழுத்தத்தோடு இருந்தால் அவர்கள் உடலில் இன்ஃப்லமேஷன் என்ற சூடு அதிகரித்து இம்யூனிட்டி செல்கள் அதாவது நோய் எதிர்ப்பு செல்களின் செயலாக்கத்தை தாறுமாறாக மாற்றி விடும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE