யூரிக் அமிலம் அதிகப்படியாக உடலில் சுரக்கும் போது மூட்டுகளில் உள்ள குருத்தெழும்புக்குள் அது குவியத் தொடங்கி வீக்கத்தை ஏற்படுத்தி அதிக வலியை கொடுக்கும். தாங்க முடியாத இந்த வலியை குறைக்க 5 இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் அந்த பிரச்சனையை ஏற்படுத்தும் யூரிக் அமில அளவையும் குறைக்க முடியும்.

எதனால் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது

நமது உடலில் புரதச் சிதைவு காரணமாகவே யூரிக் அமிலம் உருவாக தொடங்கும் இதனால் கீல்வாதம் என்ற ஒரு நோய் உண்டாகிறது. கீழ்வாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படும். மூட்டுகளில் உள்ள குருத்தெழும்புகளும் தேய்மானம் அடைய இந்த வலி ஒரு முக்கிய காரணமாக அமையும்.

சிறுநீரகம் ஃபில்டர் செய்யாது

அதிக புரதத்தை கொண்டுள்ள யூரிக் அமிலத்தை சிறுநீரகங்களால் சிறுநீர் வழியே வெளியேற்ற முடியாது. இது அதிக பியூரினை உருவாக்க தொடங்கும். இதனால் அதிகப்படியான யூரிக் அமலமானது உடலில் உள்ள மூட்டுகளின் குருத்தெழும்புகளில் குவியத் தொடங்கும். இது நாளடைவில் வீக்கத்தை ஏற்படுத்தி மூட்டு வலியை உண்டாக்கும்.

தாங்க முடியாத வலி

மூட்டு வலியானது சாதாரணமாக இல்லாமல் தாங்கவே முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். ஒரு நபருக்கு யூரிக் அமிலம் ஆனது ஒரு டெசிலிட்டருக்கு 3.5 முதல் 7.2 மில்லி கிராம் வரம்பில் இருக்க வேண்டும். ஆனால் சிறுநீரகங்கள் பில்டர் செய்யாத யூரிக் அமிலம் உடலில் கலந்து மூட்டுகளில் தேங்கும். அப்போது இது விவரிக்கவே முடியாத ஒரு மூட்டு வலியை ஏற்படுத்தும். எனவே அந்த யூரிக் அமிலத்தின் அளவை இயற்கையான முறையிலேயே குறைப்பது எப்படி என்பதை தற்போது “த காரிகை”யின் கட்டுரை விளக்குகிறது.

புதினா

புதினா இலைகளில் எப்போதுமே இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, போலேட் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது அலர்ஜி எதிர்ப்பு சக்தியையும் கொண்டது. எனவே, புதினா இலைகளை அடிக்கடி சாப்பிட்டு வர சிறுநீரில் உள்ள பியூரின்கள் வெளியேறும். மேலும் புதினாவானது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்கும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி இலைகள் வாசனைக்கு மட்டும் பெயர் போனவை அல்ல. இதில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவையும் யூரிக் அமிலத்தையும் வெகுவாக குறைக்கும்.

பிரிஞ்சி இலை

பிரிஞ்சி இலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இதுவும் அலர்ஜி எதிர்ப்பு சக்தியையும் கொண்டது. பிரிஞ்சி இலையை தண்ணீரிலோ அல்லது டீயிலோ கொதிக்க வைத்துக் கூட பருகலாம். இதனால் ஏற்கனவே வந்துவிட்ட மூட்டு வலி கூட குறையும்.

வெற்றிலை

வெற்றிலையை நன்கு மென்று சாப்பிடுவதும் சிறுநீர் மற்றும் யூரிக் அமிலத்தை வெளியேற்றுகிறது. நாள் முழுவதும் மூட்டு வலி பிரச்சனை வராமல் இருக்க அதிகாலையிலேயே ஒரு வெற்றிலை மென்று சாப்பிடலாம்.

கறிவேப்பிலை

மேற்சொன்ன இலைகளைப் போல கருவேப்பிலையும் யூரிக் அமிலத்தை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனை உட்கொள்வதால் ரத்தத்தில் தேங்கி சுழன்றோடி கொண்டிருக்கும் யூரிக் அமிலம் குறுத்தெலும்புகளில் தேங்காது சிறுநீர் வழியாகவே வெளியேற்றப்படும்.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களையும் பின் தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE