நடிகர் சிவகார்த்திகேயன் தன் வாழ்வில் மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாக டி. இமான் பரபரப்பாக குற்றம் சாட்டி உள்ளார்.

முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்று மிமிக்ரி போட்டியில் காமெடியானாக அறிமுகமாகி, தொகுப்பாளராகி, கதாநாயகனாக தற்போது உச்சம் தொட்டு வருகிறார். ஏற்கனவே பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களையும் அவர் எடுத்துள்ளார்.

அயலான் படத்துக்கு ப்ரமோஷன் படு வேகமாக நடைபெற்று வரும் நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் டி இமான் அளித்த பேட்டி சிவகார்த்திகேயனின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயன் டி இமான் கூட்டணி கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக தொடர்ந்தது. மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கப் பரிந்துரைத்தது டி இமான் தான். அப்போது அவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். மனம் கொத்தி பறவை மட்டும் இன்றி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை, சீமராஜா என சிவகார்த்திகேயன் நடித்த பல படங்களுக்கு வெற்றி கூட்டணியாக இருந்து இசையமைத்து ஹிட் பாடல் கொடுத்தவர் இமான். அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.

ஆனால், சமீபத்தில் வரும் சிவகார்த்திகேயனின் படங்களில் அனிருத்தும், ஏ ஆர் ரகுமானும் தான் இசையமைத்து வருகின்றனர். மீண்டும் சிவகார்த்திகேயன் இமான் வெற்றி கூட்டணி எப்பொழுது அமையும் ?ஏன் அவரது படக்குங்களில் இசையமைக்கவில்லை என யூடியூப் சேனலைச் சேர்ந்த நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த இசை அமைப்பாளர் இமான், “சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் நான் இணைந்து பயணிப்பது கடினம். அவரது படங்களில் நான் பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறார். என்னால் அதை வெளியில் சொல்ல முடியாது. அப்படி நான் வெளியிட்டால் என்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். சிவகார்த்திகேயன்தான் என்னுடைய வாழ்க்கையில் நடந்த பல முக்கிய துன்பங்களுக்கு காரணம். நெருக்கமாக பழகிய அவர் எனக்கு செய்த துரோகத்தை என்னால் ஏற்க முடியவில்லை.” என மனவேதனையுடன் கூறினார்.

டி இமானின் தனிப்பட்ட வாழ்க்கையில் சமீபத்தில் தான் அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அமலி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சமூக ஊடகங்களில் பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இமான் எதை கூறுகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் டி இமானின் முன்னாள் மனைவியும் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், “சிவகார்த்திகேயன் எங்கள் குடும்ப நண்பர். எங்களுக்கு விவாகரத்து நடக்கக்கூடாது என்று அவர் சமாதானம் பேச முன்வந்தார். நல்ல எண்ணத்தில் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், நண்பரின் குடும்பம் பிரியக்கூடாது என சிவகார்த்திகேயன் நினைத்து பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் இமானுக்கு இது பிடிக்கவில்லை. இமானின் விவாகரத்து முடிவை ஏற்காமல் நியாயத்தின் பக்கம் சிவகார்த்திகேயன் நின்றதை அவர் துரோகம் என்று சொன்னதாக நான் நினைக்கிறேன்” ன்று கூறியுள்ளார்.

தனது விவாகரத்துக்கு முன்னதாக “திருமணத்துக்கு ஒரு பெண்ணை பார்த்துவிட்டு அரசியல்வாதிகளை வைத்து எனது தந்தையை கொன்று விடுவதாக மிரட்டினார் இமான். இதனால் 46 நாட்களில் அவர் விரைவாக விவாகரத்து பெற்றார். அவரிடம் இருந்து நானோ, எனது குழந்தைகளோ ஜீவனாம்சம் எதுவும் வாங்கவில்லை. அவரது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறிய நான் தற்போது 30 பேரை வேலைக்கு வைத்து நடத்தும் அளவுக்கு ஒரு கம்பெனியை உருவாக்கி விட்டேன்.” என பெருமிதமாக கூறியுள்ளார்.

தற்போது வேலை இல்லாததால் பட வாய்ப்புகள் குறைந்ததால் டி இமான் சர்ச்சைகளை கிளப்பி பேட்டி கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இமானின் பிரச்சனைகளை பற்றி பேச எனக்கு நேரமில்லை என்றும் தான் பயங்கர பிசியாக இருப்பதாகவும் கூறி அவர் அந்த பேட்டியில் முடித்துள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE