இயக்குநரும், நடிகர் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா, பிரிவுக்குப் பின் முதன்முறையாக தனது கணவராக இருந்த தனுஷைப் பற்றிப் பேசியுள்ளார்.

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுஷுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் அவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். அதன் பின் 2 ஆண்டுகள் கழித்தும் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாக எந்த தகவலும் வரவில்லை. அதேபோல் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வாங்கி பிரிந்துவிட்டதாகவும் தகவல் இல்லை.

இருவரும் தனது மகன்களுக்காக ஒன்றாகச் சேர்ந்து பள்ளி விழாக்களில் பெற்றோராகப் பங்கேற்றனர். ஐஸ்வர்யாவின் படத்துக்கு தனுஷ் வாழ்த்தும் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் முதன்முறையாக, பிரிவுக்குப் பின்னர் ஐஸ்வர்யா தனுஷ் பற்றி பேசியிருக்கிறார்.

சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “அனிருத் என்னதான் எனது கசின் ஆக இருந்தாலும், அவரது திறமையை கண்டுபிடித்தது தனுஷ் தான். அப்போது அனிருத்தை மேற்படிப்புக்காக சிங்கப்பூர் அனுப்ப அவரது பெற்றோர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தனுஷ்தான் அவரது திறமையைக் கண்டறிந்து, அனிருத்தின் பெற்றோரை பேசி சமாளித்து இசைத்துறையில் அனிருத்துக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்.

தனுஷ் கீபோர்ட் ஒன்றை அனிருத்துக்கு பரிசளித்து 3 படத்தில் இசையமைக்கச் செய்தார். 3 படம் என்னதான் நான் இயக்கியதாக இருந்தாலும், அனிருத்தை அறிமுகப்படுத்திய பெருமை தனுஷையே சேரும்.

அதுவும் ஒய் திஸ் கொல வெறி டி பாடல் உலக மகா ஹிட் அடித்தது. பிற பாட்டுக்களுமே தமிழ் இசைத்துறையில் ஹிட்டடித்தன.

எனவே, தனுஷ்தான் அனிருத்தின் இசைத்துறை அறிமுகத்துக்கு முழு காரணம் என மொத்த புகழையும் தனது முன்னாள் கணவர் தனுஷின் தலையில் சுமத்தினார்.

அதேசமயம் அறிமுகப்படுத்தியது தனுஷாக இருந்தாலும், அனிருத்தின் திறமைதான் அவரது வெற்றிக்குக் காரணம் என்றும் அனிருத்தின் திறமையையும் ஒரு சேர அங்கீகரித்தார்.

என்னதான் இருவரும் பிரிந்தாலும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் பொதுவெளியில் பாராட்டிக் கொள்வதன் மூலம் அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE