பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் அருமையாக விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்த போதும் தனது முரட்டுத்தனத்தாலும் பிடிவாதத்தாலும் வெளியேறி இருப்பவர் பிரதீப் ஆண்டனி. இவர் ஏற்கனவே சீசன் 3 நிகழ்ச்சியில் கவினுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தவர். கவின் உடைய நண்பர்.

நெகட்டிவிட்டியில் இருந்து கவினைக் காப்பாற்ற தன்னை கெட்டவனாக்கி கவினை அடித்து அப்போதே தனது ஸ்ட்ரேட்டஜி மூலம் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் 7 சீசனில் உள்ளே நுழைந்து தனது ஆட்டத்தின் புரிதலையும் போக்கையும் சிறப்பாகவே நகர்த்தி வீட்டில் உள்ள அனைவரையும் வெளியேற்றி ஜெயிக்க நினைத்தார்.

50 லட்சம் ரூபாய் டைட்டில் பணத்தை வென்று விட்டு தான் திரும்புவேன் எனவும், டைட்டில் தனக்குத்தான் என்றும், அனைவரது மனதிலும் ஆழமாக பதிய வைத்த பிரதீப்பை பலரும் பாராட்டினர். ஆனால் அவர் கெட்ட வார்த்தை பேசுவது, முரட்டுத்தனமாக நடந்து கொள்வது, ஆமாம் அப்படித்தான் என சொல்வது உள்ளிட்ட காரணங்களாலும், பிறரது முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொண்டதாலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் பிக்பாஸிடம் இன்னொரு வாய்ப்பு கேட்டிருக்கலாம் என பலரும் கூறியபோதும் அவர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து தனது வீட்டின் மெத்தையில் தனக்கு வழங்கப்பட்ட கோல்டன் ஸ்டார் லைக் பட்டன்களை வைத்து புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் பிரதீப். ரெட் கார்டை கையில் வைத்து தனது குடும்பத்தினர், நண்பர்களோடு ஒன்றாக ஜாலியாக இருப்பதையும் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். 8 மாதங்களுக்கு முன் பிரதீப் ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டியும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

“எனக்கு தயாரிப்பாளர்களிடம் சென்று வாய்ப்பு கேட்பது என்பது சுத்தமாக பிடிக்காது. ஒரு கலைஞனாக என்னிடம் இந்த திறமை இருக்கிறது எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று நான் கேட்பதை என்னுடைய மனது ஆனது ஒத்துக்கொள்ள மறுக்கிறது. நான் அதிகமாக விளம்பர படங்களில் தான் பணியாற்றி இருக்கிறேன். ஒரு பிராண்டை என்னிடம் தந்து பிரமோட் செய்ய முடியுமா என்று கேட்பார்கள், நான் அவர்கள் கேட்டபடி செய்து கொடுப்பேன். நான் அடிப்படையில் ஒரு ஹிந்தி மாணவன்.

நான் தமிழ் படிக்கவே இல்லை. பின்னர்தான் தமிழை நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன். எனக்கு காதல் வாழ்க்கை உண்டு. 2 காதல் தோல்விகளை நான் என்னுடைய வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறேன். முதல் காதலியுடன் 7 வருடம் பயணித்தேன். இரண்டாவது காதலியுடன் 4 வருடங்கள் பயணித்தேன். அவளுக்கு தற்போது கல்யாணம் ஆகிவிட்டது.

தற்போதும் நான் ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறேன். அவள் எவ்வளவு நாட்கள் என்னோடு இருப்பாள் என்பது தெரியாது. காரணம் என்னவென்றால் அவளுடைய வாழ்க்கையை அவரவர் வாழவேண்டும். நம் இஷ்டத்திற்கு நாம் அவரை இழுத்துச் செல்ல முடியாது. நான் என்ன வேலை செய்கிறேன் என்பதை சொல்வது தான் எனக்கு மிகவும் கஷ்டமான வேலை.

வாழ்க்கையை நீங்கள் கொண்டு போக வேண்டும் என்றாலே ஒரு குறிப்பிட்ட அளவிலான பணமானது உங்களுக்கு தேவைப்படும். ஒரு அவசர மருத்துவ உதவி என்றால் கூட உங்களுக்கு பணம் வேண்டும். நான் ஏன் அவ்வப்போது சினிமாவில் பயணிக்கிறேன் என்றால் அதற்கு காரணம் பணம் நெருக்கடிதான். 6 மாதங்கள் ஒரு இடத்தில் வேலை பார்ப்பேன். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சினிமாவில் முயற்சி செய்வேன். என்னை பார்க்கும் நபர்கள் பலர் பைத்தியக்காரன் என்று தான் அழைப்பார்கள். இந்த உலகத்தில் பைத்தியக்காரத்தனமாக இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாது” என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE