பள்ளிகளில் தான் ஒரு குழந்தை நான் எனக்கு உச்சா வருது என்று சொல்லிவிட்டு வெளியே போகும். அதை தொடர்ந்து 1 அல்லது 2 குழந்தைகள் எனக்கும் வருது என்று பர்மிஷன் கேட்டு வந்து நிற்கும். அதுபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து பவா செல்லதுரை வெளியேறியவுடன் நானும் போகிறேன் பெட்டியத் தூக்கிட்டு கேட்டு முன்னாடி தர்ணா செய்தார் மாயா.

பின் கன்ஃபெசன் ரூமுக்கு அழைக்கப்பட்டதும், மாயா சொன்னது இதுதான். “இந்த பிரதீப்புக்கு சைக்கியாட்ரிஸ்ட் உதவி தேவை. என்னென்னமோ உளறுகிறான். தூங்கிட்டு இருக்கும் போது என்ன கொன்னாலும் கொன்றுவான். நான் இந்த வீட்டுக்குள்ள வரமாட்டேன். பவா சார் வெளியில போறாரு நானும் போறேன்.” அப்படின்னு சொல்லி பெட்டியை தூக்கிட்டு தர்ணா செய்தார் மாயா. இந்த அர்த்த ராத்திரியிலயும் நேரத்திலும் இத்தனை பேர் உங்களை கவனித்துக்கொண்டு தான் இருக்கோம். உங்க பாதுகாப்புக்கு ஒன்னும் குறை வராது. என்னை நம்பு என்று சமாதானப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பினார் பிக் பாஸ்.

இன்னொரு பக்கம் பவா செல்லதுரை வெளியேறினதும் முதல் வேலையா ஏதாவது ஒரு ஹோட்டலில் போய் நல்ல ஒரு காபி சாப்பிட்டு தான் வேற வேலை பார்த்திருப்பாரு, என்றெல்லாம் இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். “காபி இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை” என்றும் ஹாஸ்டேக் பதிவிட்டு பரப்பி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோரில் கண்ணனாக நடிக்கும் சரவணன் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஒரு வாரமாக விஜய் கேப்டன் ஆக இருந்த காலம் எப்படியோ போய்விட்டது. ஆனால் சரவணனுக்கு விஷ்ணு ஆரம்பம் முதலே பல அட்டகாசங்களை கொடுத்து வருகிறார்.

விஷ்ணு என்ன தான் வேலை செய்ய மறுத்தாலும் கேப்டனாக உள்ள சரவணன் தலைமையில் யார் யாருக்கு என்னென்ன வேலை என்று பிரித்துக் கொடுக்கப்பட்டது. அப்போது ‘உனக்கு சமையல் தெரியும் இல்ல? நீ அந்த டீமுக்கு போ’ என விஷ்ணு நாட்டாமை செய்ய, அதை நீ சொல்லக்கூடாது சரவணன் சொல்லட்டும் என்று விஷ்ணுவை கடுப்பு ஏற்றினார் பிரதீப்.

விஷ்ணு உரிச்சு வைத்த மாதுளம் பழத்தை, பிரதீப் எடுத்து ஊருக்கெல்லாம் தானம் கொடுத்த சம்பவம் விஷ்ணுவுக்கு மேலும் கடுப்பை ஏற்றியது.

நாமினேஷன்

மரியாதை இல்லாமல் பேசுகிறார் என்ற ஜோவிகா மீது நாமினேஷன் புகார்கள் வந்தன.

பிக்னிக் வந்தவர் போல் ஜாலியாக இருக்கிறார் என்று அக்ஷயா பத்தி நிறைய புகார்கள் வந்தன.

விஷ்ணு, மாயா, பிரதீப், அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா மற்றும் பூர்ணிமா ஆகியோர் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

ஷாப்பிங் டைம் தொடங்கியதும் படபடவென உள்ளே புகுந்த கண்டஸ்டென்டுகள் தங்களுக்கு தேவையான பொருட்களை அள்ளி வந்தனர். அப்போது சுகர எடுத்து வர மறந்து விட்டனர். அதேபோல் பிக் பாஸ் கொடுத்த தேங்காயில் ஒன்று கெட்டுப் போனது. அதற்கு பதிலா 30 ரூவா கழிச்சுக்கோங்க அது கெட்டுப் போச்சுங்கன்னு கூல் சுரேஷ் கூறினார். அண்ணாச்சி கடையா இருந்தா ஈஸியா மாத்திரலாம். பால் கெட்டு போனா கூட குக்கரோட கொண்டுபோய் காட்டுனா காசு குடுத்துருவாரு” எனக் கூறினார். அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் பாணியில், உடனே ரோசம் வந்த பிக்பாஸ் ஒன்றுக்கு பதிலாக 2 தேங்காய்களை அனுப்பி வைத்தார்.

போரிங் பர்ஃபார்மர் பேர் வாங்கிக்கிட்டு 3 நாள் ஜெயிலுக்கு போக வேண்டிய நிலைமைக்கு வந்து இருக்காங்க அனுஷாவும், அக்ஷயாவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE