தோழியின் காதலில் பஞ்சாயத்து; ஹாஸ்டலில் புகுந்து கழுத்தறுத்து கொலை

பெங்களூருவில் கிரித்தி குமாரி என்னும் 24 வயது பெண் பி.ஜி. என்ற பேயிங் கெஸ்ட் ஹாஸ்டலில் தங்கியிருந்தார். இவர் பீகாரைச் சேர்ந்தவர்.

என்ன ஆச்சு?

இவரது ஹாஸ்டலில் இரவு 11 மணிக்கு மேல் நுழைந்து, அறைக்கதவைத் தட்டி கிரித்தியை வெளியே இழுத்து, சுவற்றின் ஓரம் வைத்து கத்தியால் குத்தினார் ஒரு மர்ம நபர்.

தன் முழு பலத்தை முயற்சித்து தள்ள முயன்றும் முடியாததால் அப்பெண் அலறித் துடித்தார். சத்தம் அதிகம் போடவே, அப்பெண்ணின் குரல்வளையையும் நெருக்கிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினான் அவன்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு அழைத்து தகவல் தெரிவிக்கவே, அவர்கள் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர்.

கொலைக்கான காரணம் என்ன?

கிரித்தி, பணி நிமித்தமாக பெங்களூருவில் தங்கியிருந்தார். அங்கு தன்னுடன் இருக்கும் அறைத்தோழியிடம் பாசமாகவும் பழகி வந்தார்.

அந்த தோழிக்கு ஒரு பாய் ஃபிரண்டும் இருந்தார். அவரோடு எப்போதும் ஃபோனிலேயே உரையாடிய தோழி, கிரித்தி குமாரிடம் வந்து தனது பாய்ஃபிரண்ட் தன்னை டார்ச்சர் செய்வதாகக் கூறி, கிரித்தி குமாரி பல முறை பஞ்சாயத்தும் செய்துவந்தார்.

காதல் பஞ்சாயத்து

கிரித்தி தான் தன் காதலில் பஞ்சாயத்து மூலம் பிரச்னை செய்வதாக நினைத்த அந்த பாய் ஃபிரண்ட் அவர் மீது ஆத்திரமாக இருந்திருக்கிறார். பிரச்னைகள் தொடரவே, அந்த பாய் ஃபிரண்டிடம் பேச வேண்டாம் என கிரித்தி உத்தரவிட்டதால் அவரது அறைத் தோழியும் அதையே பின்பற்றியிருக்கிறார்.

தனது பெண் தோழி தன்னிடம் பேசாமல் போனதற்குக் காரணம் கிரித்தி தான் என ஆத்திரமடைந்த அந்த நபர்தான் கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து பல இடங்களில் தேடி போலீசார் மத்தியப்பிரதேசத்துக்கு விரைந்து அந்த நபரை 4 நாட்களில் கைது செய்து பெங்களூரு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE