பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள். அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

சமையலில் செய்யக்கூடாவதவை

  • ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
  • காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
  • மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
  • கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
  • காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
  • சூடாக இருக்கும் போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
  • தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
  • ஃபிரிட்ஜில் வாழைப்பழமும் உருளைக்கிழங்கும் வைக்கக்கூடாது.
  • பெருங்காயம் தாளிக்கும் போது எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
  • தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
  • குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
  • குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
  • செய்ய வேண்டியவை..!
  • மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
  • புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
  • ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
  • போளிக்கு மாவு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
  • குருமாவை இறக்கும்
    போது கரம்
    மசாலாவை
    சேர்க்க வேண்டும்.
  • பச்சை கற்பூரம் டப்பாவில் நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
  • குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
  • வாழைப்பூவை முதல் நாள் இரவே நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.
  • கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முத்தின பாகாக இருக்க வேண்டும்.
  • வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE