பிக் பாஸில் நாம் என்ன தவறு செய்தாலும் வீக் எண்ட் அன்று கமல் சார் வந்ததும் சாரி சார் என ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் எஸ்கேப் ஆகிவிடலாம் என்று வெளிப்படையாகவே பேசி இருந்தார் பூர்ணிமா.

“இதை கமல் சார் கண்ணில் படும்வரை ஷேர் செய்யவும். இவங்களுக்காகத்தான் நீங்க பிரதீப்ப தூக்குனீங்களா?” என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கமென்ட்டுகள் கிளம்பியது.

அது மட்டும் இன்றி பிரதீப் எவிக்டாகி வெளியேறிய விவகாரத்தில் மாயா பூர்ணிமா ஐசு ஜோவிகா உள்ளிட்டோர் ஒரு கேங் ஆக இணைந்து விமன் கார்டு என்ற பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை பயன்படுத்தி உரிமை குரல் எழுப்பி அவர்கள் பிரதிப்பை வெளியே அனுப்பினர்.

வினுஷாவின் உடல் கட்டமைப்புகளை விமர்சித்த நிக்சன் சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கப்படுகிறார். இந்த விவகாரம் பொதுவில் வரும் அளவுக்கு வீட்டுக்குள்ளேயே திரை போட்டு ஒவ்வொருவரும் வெளியிட்ட ஸ்டேட்மெண்ட்களை சுட்டி காட்டினார் பிக் பாஸ்.

இதனால் மாயாவின் கேங்கில் இருந்து பிரச்சனையை கிளப்ப பார்த்த விசித்ராவின் கேங்குக்கு தாவுகிறார் நிக்சன். விசித்ராவிடம் சரணடைந்து விட்டால் அவர் இந்த பிரச்சனையை அதிகம் கிளப்ப மாட்டார் என்று அவர் நம்புகிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் BB கோர்ட் என்ற ஒன்று 39 ஆம் நாள் டாஸ்காக வந்தது.

ஒவ்வொருவரும் தனக்குள்ள பிரச்சனையை நீதிமன்றத்தின் முன் வெளிப்படுத்த வேண்டும்.

தனக்காக சிறப்பாக வாதாடுபவர்களுக்கும் சிறந்த தீர்ப்பளிக்கும் நீதிபதிக்கும் ஸ்டார் பரிசு வழங்கப்படும் என பிக் பாஸ் அறிவித்தார்

முதல் வழக்கை பூர்ணிமாவுக்கு எதிராக தொடுத்தார் விஷ்ணு.

மாயா மற்றும் பூர்ணிமாவின் முன்னிலையில் பூர்ணிமாவின் உடல் பாகம் குறித்த ஒரு பாலியல் கிண்டலை பிரதீப் சொன்னதாகவும் இதை கேட்டு பூர்ணிமா அதிர்ச்சியடைந்து மௌனமாகி நின்று விட்டு பிறகு “மாயா இதைக் கேட்கமாட்டீர்களா?” என கேட்பது கேட்டதாகவும் அதற்கு மாயாவும் “அண்ணா இப்படி எல்லாம் பேசாதீங்க” என்று கோபம் இன்றி இயல்பாக பிரதிப்பிடம் சொல்லி இருப்பதாகவும் சொன்னார். ஆனால் இந்த சம்பவத்தை கேட்கும் போது மாயா சிரித்துக்கொண்டே சொன்னதாக பூர்ணிமாவின் வழியாக விஷ்ணு அறிந்து கொண்டார். என்பதே புகார்.

தான் அந்த தொணியில் விஷ்ணுவிடம் சொல்லவில்லை என பூர்ணிமா விளக்கம் தர மாயாவும் சாட்சி சொல்ல
இதில் பூர்ணிமா பக்கம் ரவீனா தீர்ப்பு சொல்ல, அடிப்படை இலக்கணம் தெரியாமல் தீர்ப்பளிப்பதாக பிக் பாஸ் கூற இதை எடுத்து பிளேட்டை மாற்றி போட்டு விஷ்ணுவின் பக்கம் தீர்ப்பு கூறினார் ரவீனா.

எதிர்பாராமல் கிடைத்த இந்த வெற்றியை விஷ்ணு கொண்டாட பூர்ணிமாவுக்கும் மாயாவுக்கும் முகம்வாடி போனது.

தீர்ப்பு சொன்ன பிறகு பிக் பாஸ் குறுக்கீடு செய்ததால் பிக் பாஸ்க்கு தனது ஆட்டம் பிடிக்கவில்லையோ என பூர்ணிமா சந்தேகித்தார். “இதுதான் ஸ்கிரிப்ட்ன்னு சொல்லி இருக்கலாமே, மூளை இல்லாத. . . ” என பூர்ணிமா சொல்ல நினைத்தபோது “பார்த்து பேசு” என மாயா அவரை தடுத்தார். இது நம்மள பிரிக்கிறதுக்கான சதி பாத்துக்கலாம் விடு என்று ஆறுதல் கூறினார்.

பூர்ணிமா Vs விசித்ரா

அடுத்த வழக்கு விசித்ரா மீது தொடுத்தார் பூர்ணிமா. மளிகைப் பொருட்களை வாங்க அர்ச்சனாவை அனுப்பிய போது இது பழிவாங்கும் நோக்கத்தோடு செய்த விஷயம் என பூர்ணிமா புகார் கூறினார்.

“இதில் என்ன தீர்ப்பு வரணும்னு விரும்புறீங்க?” என ஆரம்பித்த பிக்பாஸ் சட்டென்று மாற்றிக் கொண்டு “எதை நிரூபிக்கணும்னு விரும்புகிறீர்கள்?” என்று கூறினார். விஷ்ணுவிடமும் இப்படி கேட்டிருக்க படுமோ என்ற சந்தேகம் கொண்ட பூர்ணிமா, “விஷ்ணு கிட்ட இப்படி கேட்டீங்களா?” என்று கேள்வி கேட்டார். இதை அடுத்து உங்க வழக்கப் பற்றி மட்டும் பேசுங்க என்று பிக் பாஸ் ஒரு அதட்ட வழக்கு துவங்கியது

வாக்கெடுப்பின் மூலம் தான் அர்ச்சனா ஷாப்பிங் டாஸ்கிற்கு சின்ன வீட்டில் இருந்து அனுப்பப்பட்டார் என்றும் விசித்ரா திட்டமிட்டே சதி செய்ததாகவும் பூர்ணிமா குற்றம்சாட்டினார்.

அவங்களுக்கும் ரிலாக்ஸ் வேணும் இல்ல என்றும் கூல் சுரேஷ் மற்றும் சின்ன வீட்டார் கூறினர்.

சமையல் விஷயத்தில், “அங்க போய் கத்துக்கட்டும் அப்படிங்கிற காரணத்தை சொல்லித்தானே அர்ச்சனாவை சின்ன வீட்டுக்கு மாயா அனுப்பிச்சாங்க? அதனால தான் அர்ச்சனாவைத் தேர்ந்தெடுத்தேன் என்று தினேஷ் சாட்சி சொன்னது சரியான பாயிண்டாக இருந்தது.

நீதிபதி நிக்சன் ஆர்டர் ஆர்டர் என்று தடுத்தாலும் பூர்ணிமாவும்-விசித்ராவும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இதை அடுத்து எதிர்பார்த்தபடியே நிக்சன் விசித்ராவின் பக்கம் தீர்ப்பளித்தார்.

ஷாப்பிங் பில்லை வைத்து செக்

பெரிய வீட்டினர் தங்களது தவறுகளை மறைக்க ஷாப்பிங் பில்லை மறைத்து வைத்தனர். பிக் பாஸ் ஒரு டாஸ்க் வைத்ததால் சின்னவீடு வென்று ஜெயித்தது.

இதில் பிக் பாஸ் பெரிய வீடு தோற்றதால் ஒருவர் சிறை செல்ல வேண்டும் என்று பிக் பாஸ் கூறினார். இதை அடுத்து மாயா விஷ்ணுவை தேர்ந்தெடுத்தார். அடுத்தடுத்து வந்தவர்களும் விஷ்ணுவையே தேர்ந்தெடுத்தனர். வீட்டில் இத்தனை ரணகளம் நடந்து கொண்டிருக்கும் போது விஷ்ணு ஒரு பார்வையாளராக அமைதியாக சுற்றிக் கொண்டிருந்தார் என்பது மாயாவும் ஜோவிகாவும் வைத்த குற்றச்சாட்டு. உங்க சைடு நியாயமே இல்லை எப்படி பேச முடியும்? என்று விஷ்ணு மறுக்க, நீங்க யாராவது ஒரு பக்கமாவது பேசியிருக்கலாம் எங்க பக்கம்தான் பேசணும்னு அவசியம் இல்லை என ஜோவிகா ஒரு ஸ்வாகான உடல் மொழியோடு பேச எரிச்சல் அடைந்த விஷ்ணு, “கொளந்த. . டம்மி பீஸு. . . ஓரமாப் போ. . . ” எனக் கூறி ஜோவிகா கண்கலங்கினார்.

பிரதீப் சென்றதிலிருந்து அமைதியாகிப் போன கூல் சுரேஷ் பில் மறைக்கப்பட்ட விஷயம் தெரிந்ததும் மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தார். “ஏன் பில்லை ஒளிச்சு வச்சீங்க?” என கத்த சுரேஷுக்கு ஆன ஆதரவு குரல் அங்கு அதிகரித்தது.

இதை அடுத்து விஷ்ணு ஜெயிலுக்கு சென்றார். “அப்பா 2 நாட்கள் இவங்க தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்” என சொல்லிக் கொண்டே ஜெயிலுக்கு சென்றார் விஷ்ணு.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE