பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வீடு இரண்டாகி, இருதரப்பு வீட்டில், உள்ளவர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மன கசப்பு சின்ன வீட்டில் இருப்பவர்களை ஸ்ட்ரைக் வரை கொண்டு சென்றது அதனால் அவர்கள் சமைக்க மாட்டேன் என்ற அடம் பிடிக்க வீடு பசியால் துடித்துப் போனது.

பிக் பாஸ் சீசன் 7-ன் 11 ஆவது நாளில் மணிக்கும் ரவீனாவுக்கும் இடையே என்ன உறவு உள்ளது? என்பதை அறிய சில கண்டஸ்டன்டுகள் அபத்தமான கேள்விகளை கேட்டனர். அதில் “போன சீசன்ல நான் பார்த்த சில விஷயங்கள் எனக்கு பிடிக்கல, நீங்க பிரண்ட்ஸ் தான், பிரண்ட்ஸ் மட்டும் தான்.” என மாமியாரை போல வந்து அவர்கள் என்ன உறவில் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி சென்றார் விசித்ரா. உளவியல் படித்த அவர் முதிர்ச்சியற்ற செயலில் ஈடுபட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸை மொத்த நிகழ்ச்சியாகவே பார்க்கும் ஸ்ட்ரேட்டஜி கிங் பிரதிப்போ “லவ் கண்டன்டா தருகிற ரவீனா? இந்த வாரம் விஷ்ணுவை லவ் பண்ணேன். ஜாலியா இருக்கும்” என பேசினார். இந்த வாரம் இவர் அடுத்த வாரம் வேறு ஒருவர் என்பது போல் மாற்றி மாற்றி ரவீனா லவ் செய்யலாம் என்று பேசி அசிங்கப்படுத்தினார் பிரதீப். இது மணிக்கு பிடிக்காத பேச்சாகிப் போனது

இதை அடுத்து அங்க வந்த ஐசுவோ உங்களுக்கு நடுவுல அப்படி என்னதான் இருக்கு? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு செய்ங்க என்று ஒரு HOD போல மிரட்டி சென்றார்.

காலை எழுந்ததும் நடிகை விசித்ரா கிச்சன் இடம் சுத்தமாக இல்லை என சுட்டிக்காட்டுகிறார். அதை வெறும் வாய் வார்த்தையாக சொல்லாமல் “ஏன்மா மாயா ஏன் உனக்கு கல்யாணம் ஆச்சா? என்னது நாலஞ்சு முறை ஆச்சா? கிச்சன் இப்படி இருந்தா அப்படித்தான் ஆகும்.” என்றெல்லாம் அதிக பிரசங்கித்தனமான பேசினார் விசித்ரா.

எண்ணெய் இல்லாத தோசையை தான் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருப்பதாக அக்ஷயா கூற, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி சமைக்க முடியாது. இங்க ஏற்கனவே 7 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 6 பேர் தான் இருக்கோம். இன்னொருத்தர் கொடுத்தால் தான் சமைப்போம்” என்று ஸ்ட்ரைக் செய்ய தொடங்கினர் சின்ன வீட்டில் இருப்பவர்கள்.

என்ன? ஸ்ட்ரைக் எல்லாம் செய்கிறீர்களாமே என குசலம் விசாரித்தபடியே பேசிய சின்ன பிக் பாஸ், அது சரி நான் சொன்ன பாட்டு விஷயம் என்ன ஆச்சு? எனக் கேட்க அவர்கள் தாங்கள் எழுதிய பாடல் வரிகளை எதிர் வீட்டில் இருக்கும் பெரிய பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை பார்த்து பாட அவர்களோ சிரித்தபடியே உள்ளுக்குள் கடுப்பாகிக் கொண்டிருந்தனர்.

2 வீட்டுக்கும் நடுவுல ஓடி ஓடி சமாதானம் செய்து களைத்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் என்கிற சரவணன், தானே அந்த ஏழாவது ஆளாக வருவதாக கூறி பிரச்சனைக்கு எண்டு கார்டு போட்டார். பின் ஃபிரைட் ரைஸையும், சிக்கன் குழம்பையும் அவர்கள் புசித்தனர்.

இந்த வாரம் கமல் வந்ததும் ஏகப்பட்ட பஞ்சாயத்து வரிசை கட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE