சூது கவ்வும், தெகிடி, போர்தொழில் படங்களில் ஹீரோவாக நடித்தவர் அசோக் செல்வன். இவரை கிரஷ்ஷாக கொண்டிருக்கும் பெண்களில் சிலரரும், சில ஆண்களுமே கூட அசோக் செல்வனுக்கு மனைவியாகியுள்ள நடிகை கீர்த்தி பாண்டியனின் அழகையும் நிறத்தையும் பற்றி கேலி செய்து வருகின்றனர்.

அன்பிற்கினியாள், தும்பா போன்ற படங்களில் நடித்த கீர்த்தி பாண்டியன் நடிகர் அருண் பாண்டியனின் 2-வது மகள் ஆவார். நடிகை ரம்யா பாண்டியனின் சகோதரியும் ஆவார்.

அசோக் செல்வனும் – கீர்த்தி பாண்டியனும் காதலிப்பதாகவும் அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் ஏற்கெனவே கிசுகிசு வந்தது. இவர்களது கல்யாணப்பத்திரிக்கை கூட இணையத்தில் வலம் வந்தது.

இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனுக்கு தாலி கட்டி இருதரப்பு உறவினர் முன்னிலையில் மனைவியாக ஏற்றுக் கொண்டார். திருமணம் நெல்லையில் உள்ள அருண் பாண்டியனுக்கு சொந்தமான ஒரு தோப்பில் நடைபெற்றது.

இவர்களது திருமணப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதைப் பார்த்த பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் வாழ்த்து மழையைப் பொழிந்து தள்ளினர். ஆனால், அதே சமயம் “ வேற பொண்ணே கிடைக்கலயா?, உங்க கலருக்கு இந்த பொண்ணு செட் ஆவல, உங்க கிரஷ் ஹார்ட் எல்லாம் இந்நேரம் வெடிச்சுருக்கும், பணத்துக்காகத்தான் இந்த கல்யாணம், வேற எதுக்கு? என ஆள் ஆளாக்கு தங்களது வாய்க்கு வந்தாற்போல கமென்ட் செக்சனில் பேசிக் கொண்டு உள்ளனர்.

ஏற்கெனவே ஐபிசி தமிழுக்கு அசோக் செல்வன் பேட்டி கொடுத்த போது நிறத்தைப் பற்றி பேசியதும் தற்போது வைரலாகியுள்ளது. தனுஷ், விஜய் போன்ற நடிகர்களின் நிறம் குறித்தும், அசோக் செல்வனின் வெள்ளையான நிறம் பற்றியும் ஆங்கர் கேள்வி எழுப்ப, நிறம் என்பது மேக்கப்பைப் பொறுத்ததுதான் என்று பதிலடி கொடுத்திருந்தார். அதனைதான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்றும் கூறியிருந்தார்.

இருந்தபோதும் அவரது நிறம் தொடர்பான விமர்சனங்கள் எல்லை மீறி போகும் நிலையில், அசோக் செல்வன் தனது பதிவின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, கீர்த்தி பாண்டியனின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர் உலகிலேயே மிகவும் அழகான பெண்ணுடன் தான் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதை தற்குறிகளுக்கான செருப்படி கேப்சன் எனவும் சிலர் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

அசோக் செல்வனுக்கு ஆதரவாக காப்பர் பியூட்டி என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர். ஏற்கெனவே நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, நந்திதா தாஸ், சில்க், சினேகா, சரிதா, சாவித்ரி, சுஹாசினி, அமலா பால், ஐஸ்வர்யா ராஜேஷ், பிபாசா பாசு ஆகிய நடிகைகளும் டஸ்கி ஸ்கின் டோனைக் கொண்டவர்கள் தான்.

மேலும் டஸ்கி ஸ்கின் கொண்டவர்களுக்கு தோல் ஆரோக்யமாக இருக்கும். அதற்குக் காரணம் அவர்களின் தோளில் உள்ள மெலனின் தன்மை அதிகரித்து இருப்பதுதான். எனவே அதிக மெலனின் ஆனது, சூரியஒளிக்கதிரில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE