நடிகை பூணம் பாண்டே சர்சசைக்கு பெயர் போனவர். இவர் கர்ப்பப் பை வாய் புற்று நோயால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தான் உயிரோடு இருப்பதாக அறிவித்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

யாரிந்த பூணம் பாண்டே?

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நாஷா என்கிற இந்தி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர். நிர்வாணப் படங்களிலும் பூணம் பாண்டே நடித்திருப்பதாக தகவலும் உண்டு.

சர்ச்சை

பூணம் பாண்டே என்றாலே பிற கவர்ச்சி நடிகை போல் கவர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்த மாட்டார். மாறாக தன் மீது ஊடக கவனமும், மக்கள் கவனமும் திரும்ப வேண்டும் என அதிகம் விருப்பப்படுபவராக உள்ளார். அது மட்டும் இன்றி, அதற்கான வேலைகளிலும் படு பிசியாக காய் நகர்த்துவார்.

திருமணமானதும் கணவரை சிறைக்கு அனுப்பினார்

நடிகை பூணம் பாண்டே தனது நீண்ட கால நண்பரான சாம்-ஐ திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடந்தததால் அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். இருந்தபோதும் அவரது திருமணத்துக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து திருமணம் முடித்த கையோடு ஹனிமூன் சென்ற பூணம் பாண்டே, தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக மும்பை காவல்நிலையத்தில் புகாரளித்தார். திருமணமான 2 வாரங்களிலேயே இந்த சம்பவம் நடந்தது.

பூணம் பாண்டேவின் புகாரைப் பெற்ற மும்பைப் போலீசாரும் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து சில நாட்கள் கழித்து மீண்டும் தனது கணவருடன் சேர்ந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் அறிவித்தார்.

இதனாலேயே இவர் சர்ச்சைக்கு எனில் சாகக் கூட செய்வார் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

திடீர் அமைதி

சமூக வலைதளங்களில் ஏதேனும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பூணம் பாண்டே பதிவிட்டுக் கொண்டே இருப்பார். ஆனால் சில நாட்களாக சமூக வலைதளங்களில் திடீர் அமைதி நிலவியது. ஆனால், ரசிகர்கள் யாரும் அதனைப் பொருட்படுத்தவில்லை.

மரணச் செய்தி

இந்த நிலையில் தான் பூணம் பாண்டேவின் சமூக வலைதளப் பக்கங்களில் திடீரென ஒரு அறிவிப்பு வந்தது. நமது அன்புக்குறிய பூணம் நம்மை விட்டு பிரிந்து விட்டார். இதனை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

ரசிகர்கள் அதிர்ச்சி

வெறும் 32 வயதே ஆன பூணம் பாண்டே திடீரென இறந்துவிட்டதாக வந்த அறிவிப்பால் ரசிகர்கள் மட்டுமின்றி சற்று பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில்தான் இருந்தது. அனைவரும் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என RIP கமென்ட்டுக்களை பதிவிட்டு வந்தனர்.

உயிரோட தான் இருக்கேன்

இந்த நிலையில்தான், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பூணம் பாண்டே. அதில், “நான் உயிரோடு தான் இருக்கிறேன். கர்ப்பப் பை வாய் புற்றுநோயானது எனது உயிரைப் பறிக்கவில்லை. ஆனால், பல அப்பாவிப் பெண்களின் உயிரைப் பறிக்கும் கொடூர நோயாகத் தற்போது பரவி வருகிறது. நோயின் தீவிரத்தை உணராது பெண்கள் பலரும் உள்ளனர். அதற்கு உரிய தடுப்பூசிகளும், விரைந்து பரிசோதனை செய்து கொள்வதும் ஒரு சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. விழிப்புணர்வுக்காகவே நான் கர்ப்பப் பை வாய் புற்றுநோயால் இறந்ததாக அறிவித்தேன். இந்த அறிவிப்பைப் பார்த்தேனும் யாரேனும் முன்கூட்டியே பரிசோதித்தால் அது நன்மைதான்” எனக் கூறியுள்ளார்.

இவரது மரணச் செய்தியை அடுத்து கூகுளில் பலரும் கர்ப்பப் பை வாய் புற்றுநோய் பற்றி தேடியுள்ளனர். அதுமட்டுமின்றி இடைக்கால பட்ஜெட்டில் தான் கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த புற்றுநோயின் அறிகுறி என்ன? யார் யாருக்குத் தடுப்பூசி போட வேண்டும்? எந்த வயதில் தடுப்பூசி அவசியம்? அதைப் பரப்பும் கிருமியின் பெயர் என்ன? என்ற முழு விவரத்தை இந்த லிங்கில் பார்க்கலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE