நடிகை ஷில்பா ஷெட்டி மேக் மேக் மேக் மேக்வொரினா பாட்டு மூலம் குஷி படத்தில் நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தவர். மிஸ்டர் ரோமியோ படத்திலும் பிரபுதேவாவுடன் நடித்தவர். இவரும் இவரது கணவருமான ராஜ்குந்த்ரா இன்ஸ்டாகிராம் ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் காதல் ரசம் சொட்டும் பல வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

இவர்கள் சிறந்த தம்பதியாக இருப்பதாக பலரும் கருத்து கூறி வந்தனர். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தாலும் இவர்களுடைய அன்யூன்யத்துக்கும் அன்பை வெளிக்காட்டும் விதத்திற்கும் ஏராளமான பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

2009 ஆம் ஆண்டு ராஜ்குந்திரா – ஷில்பா செட்டி திருமணம் நடைபெற்றது அவர்களுக்கு வியாான் மற்றும் சமிசா என 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் ஒன்றாகவே குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் ஆபாச வீடியோ தொழில் செய்ததாக ஒரு வழக்கில் கைதான ராஜ்குமார் ஆர்தர் ரோடு ஜெயிலில் 63 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

இந்த வழக்கிலிருந்து வெளியே வந்த அவர் சமூக வலைதள பக்கங்களில் இருந்து விலகியே இருந்தார். இந்த நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தம்பதிகள் இருவரும் பிரிந்து விட்டனரா? என கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது. அதாவது “நாங்கள் பிரிந்து விட்டோம், எங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த கடினமான சூழலில் எங்களுக்கான நேரத்தை கொடுங்கள்” அவர் சமூக வலைதள பக்கத்தில் கோரியுள்ளார்.

இருவரும் நல்ல தம்பதிகள் என்று பெயர் எடுத்தவர்கள் என்பதால் இதனை அவரது ரசிகர்கள் நம்பாமல் பல கேள்விகளை கமெண்ட்களில் எழுப்பி வருகின்றனர். விவாகரத்து ஆகிவிட்டதா? இருவரும் பிரிந்து விட்டீர்களா? என்ன ஆயிற்று? என்று பல கேள்விகள் அவர்களைத் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

ராஜ் குந்த்ரா தற்போது உர்ஃபி ஜாவித்துடன் இணைந்து UT 69 என்ற படத்திற்கான கதையை எழுதி தயாரித்தும் வருகிறார். ஒருவேளை இது அந்த படத்துக்கான பிரமோஷன்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் வியூகங்களை எழுப்பி வருகின்றனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE