நடிகர் அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய படப்பிடிப்புகளில் அஜித் அஜர்பைஜானில் பிஸியாக நடித்து வந்தார்.

திடீரென வீட்டில் இருந்து அவருக்கு அழைப்பு வந்ததால் உடனடியாக ஷூட்டிங்கை விட்டு வெளியேறி விமான மூலம் சென்னைக்கு அவசர அவசரமாக வந்து இறங்கினார் அஜித்.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் நடிகை ஷாலினிக்கு அவசர அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

இருவரும் ஷாலினி அஜித்குமார் instagram பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்த பின்னர் தான் ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஷயமே வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.

அந்த புகைப்படத்தில் நடிகை ஷாலினி நோயாளிகள் அணியும் உடையை அணிந்திருக்கிறார்.

அவர் கையில் மருத்துவமனையில் பேஷண்டுகளுக்கான அணிவிக்கப்படும் மணிக்கட்டு அடையாள அட்டை சுருள் அணிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கையில் நடிகர் அஜித்குமார் பற்றிக்கொண்டு முகமோடு முகம் வைத்து போஸ் கொடுத்து சிரிப்பது போன்ற அந்த புகைப்படம் அமைந்துள்ளது.

இந்த புகைப்படத்தில் இருவர் முகத்திலும் இருக்கும் சிரிப்பை பார்க்கும் போது தற்போது ஷாலினி அஜித் குமார் நன்றாகவே இருக்கிறார் என்று தெரிய வருகிறது.

சில முக்கிய ஊடகங்களும் அஜித் குமாரின் பிஆர்ஓ வை தொடர்பு கொண்டு ஷாலினிக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அது மிகவும் தனிப்பட்ட விஷயம் என்றும் நேரம் வரும்போது பகிர்வார்கள் என்றும் அவர்கள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அத்துடன் நடிகை ஷாலினி அஜித்குமார் உடல் நலம் தேறி இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் ஷாலினி அஜித்குமார் இந்த பதிவிற்காக தேர்ந்தெடுத்த பாடல் தான்.

அதில் ஐ அம் அலைவ் என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

நான் உயிரோடு இருக்கிறேன் என்பது அதன் பொருளாகும்.

அப்படி இருந்தால் ஷாலினியின் உயிருக்கு ஆபத்து வரும் அளவுக்கு அப்படி என்ன நேரிட்டது என்றுதான் அவரது ரசிகர்கள் தற்போது குழம்பிப் போய் இருக்கின்றனர்.

விரைவில் உடல் நலம் பெற்று வாருங்கள் அண்ணி என்று ஏராளமானோர் கமெண்ட் செய்து வருகின்றனர்

பொதுவாக மாதத்துக்கு 1 அல்லது 2 சமூக வலைதள பதிவுகளை இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கியதில் இருந்து நடிகை ஷாலினி அஜித்குமார் பதிவிட்டு வந்திருந்தார். ஆனால், கடைசியாக கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி சிரஞ்சீவியுடன் எடுத்த புகைப்படத்தை மீண்டும் பதிவிட்டு சிறிய வயதில் எடுத்த பழைய புகைப்படத்தோடு ஒப்பிட்டு பகிர்ந்திருக்கிறார்.

ஆனால், அதற்குப் பின்னர் அவர் சமூக வலைதளங்களில் பெரிதளவில் ஆக்டிவாக இல்லை.

இதன் மூலம் அவரது உடல்நல குறைவு ஏதும் ஏற்பட்டிருந்தால் கடந்த ஒரு மாதமாக அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்கிறார் என்று சமூக வலைதள வாசிகள் யூகித்து வருகின்றனர்.

எது எப்படியோ அவர் விரைந்து குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. த காரிகையும் அவரை வாழ்த்துகிறது.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE