மாயாண்டி குடும்பத்தார், கடைசி, விவசாயி, டாக்டர் படங்களில் நடித்த நடிகை தீபா, டிவி ஷோக்களிலும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நடிக்க வாய்ப்பு தேடி வருவோருக்கு உதவும் வகையில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கியிருப்பதாகக் கூறினார். ஆனால், அதில் வியூஸ் வருவதில்லை என்றும் கவலைப் பட்டுக் கொண்டு இருக்கிறார். அவர் பேசிய பேட்டியின் முழு வடிவம் இதோ.

“நான் ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் நடித்தும் வெளியே தெரியவில்லை. இப்போது எல்லோரும் என்னை தீபா அக்கா என்கிறார்கள். இதற்கு நான் மாயாண்டி குடும்பத்தார், கடைசி விவசாயி, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் தான் காரணம். என்னுடைய அம்மா தான் நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டவர். என் கைய புடிச்சிட்டு தான் எங்க அம்மாவோட உயிர் போச்சு’‘ என நெகிழ்ச்சியாகப் பேசினார்.

“நான் இந்த அளவுக்கு பெயரும் புகழோடு இருப்பதற்கு இறந்த அம்மா என்னை ஆசிர்வாதம் பண்ணிக்கிட்டு இருக்கிறதுனால தான்” என்று அந்த பேட்டியில் தீபா பேசி இருக்கிறார். youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் நடிக்க வேண்டும் என்று ஆசையோடு இருக்கும் நடிகர்களை வைத்து என்னுடைய சொந்த பணத்திலிருந்து அவர்களுக்கு சம்பளமும் சாப்பாடும் வாங்கி கொடுத்து வீடியோ போடுகிறேன் என்றார்.

நடிக்கா வாய்ப்பு இல்லாமல் என்னை மாதிரி பட்டவங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக தான் நான் யூடியூப் சேனலில் வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறேன். ஆரம்ப காலகட்டத்தில் இருக்கும் போது ஒரு சிலரிடம் நடிக்க வேண்டும் என்று ஏமாந்து இருக்கிறேன். அப்போது ஒருத்தன் என்னிடம் நீங்க அப்பாஸுக்கு ஜோடியா நடிக்கணும் அதனால 9 லட்சம் ரூபாய் வேணும் என்று ஏமாற்றி இருந்தான். இது போல யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காக தான் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து வருகிறேன்.” எனவும் பெருமிதத்தோடு கூறினார்.

நமக்காக எத்தனையோ உதவி செய்திருக்கிறாரே என ஒருவருக்கு விளம்பரம் நடிக்க சம்மதித்தேன். அதில் பணம் தந்தால் நடிக்க வைப்பதாக டயலாக் வரவே, கோபமாக எழுந்து வந்துவிட்டேன். அப்போதும் கூட அங்கு வாய்ப்புக்காக வந்தவர்களிடம் எல்லாம் இப்படி எல்லாம் ஏமாறாதீங்க என்று நான் அட்வைஸ் கொடுத்தேன். என்றார்

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE