“உங்க வேலைய பாருங்க” – விவாகரத்து சர்ச்சையால் கடுப்பான ஆர்த்தி ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவிக்கும் டிவி ப்ரொடியூசர் விஜி என்பவரின் மகளுக்கும் 2009 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

அமைதியான மிகவும் ஒழுக்கமான குடும்பம் என்று பெயர் எடுத்த திரைப்பட குடும்பங்களில் நடிகர் சிவகுமாருக்கு அடுத்தபடியாக ஜெயம் ரவியின் குடும்பத்தையும் அவரது அண்ணன் இயக்குனர் ராஜாவின் குடும்பத்தையும் சொல்வார்கள்.

குடும்பப் பாங்கான சினிமா ஃபேமிலி என்ற பெயரெடுத்த அவர்கள், அவ்வப்போது சமூக வலைதளங்களில் தாங்கள் ஒன்றாக வெளியூர், வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வது ஒருவருக்கொருவர் அன்போடு வாழ்த்துக்களை பரிமாறி கொள்வது என அனைத்து கொண்டாட்டங்களையும் பதிவிட்டு வந்தனர்.

சமீபத்தில் அரோரா என அழைக்கப்படும் நார்த்தன் லைட்டை காண வேண்டும் என்ற மனைவியின் ஆசையை ஜெயம் ரவி நிறைவேற்றி இருந்தார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ஜெயம் ரவியும் ஆர்த்தி ரவியும் பிரிவதாக ஒரு சர்ச்சை எழுந்தது.

இதை அடுத்து 20 ஆண்டுகள் ஜெயம் படத்தின் கொண்டாட்டம் என்ற போஸ்டரை ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்து வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், அந்த முற்றுப்புள்ளிக்கு அடுத்தடுத்து புள்ளிகள் வைத்து அது தொடர்கதையாக நடப்பது போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதே ஆர்த்தி ரவியின் instagram பக்கத்தில், ஜெயம் ரவியுடன் பதிவிட்டிருந்த அனைத்து புகைப்படங்களையும் ஆர்த்தி ரவி தடாலடியாக நீக்கியுள்ளார்.

ஆனால், தனது ப்ரொபைல் பெயரை மட்டும் ஆர்த்தி ரவி என்று மெயின்டைன் செய்து வருகிறார். Married to என்று பயோ டேக்கில் மட்டும் ஜெயம் ரவியை இணைத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆனால், ஜெயம் ரவியின் instagram பக்கத்தில் தனது மனைவிக்கு காதலர் தின வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து என தனது மனைவியுடன் நடந்த அனைத்து கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்த பதிவுகளையும் நீக்காமல் வைத்துள்ளார்.

ஜெயம் ரவி தான் முதலில் விவாகரத்து கேட்டதாகவும் ஆர்த்தி ரவி அதனை தர மறுத்து பிடிவாதம் பிடித்ததாகவும் கூறப்பட்ட நிலையில், q&a என்ற கேள்வி பதில் ஸ்டோரிக்களில் ஆர்த்தி ரவி ரசிகர்கள் விவாகரத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்ததாக ஐபிடி என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அதில், “போய் உங்களது வாழ்க்கையை பாருங்கள், அடுத்தவர்கள் எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை யோசித்துக் கொண்ட உங்கள் எதிர்காலத்தை தொலைத்து விடாதீர்கள். அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழுங்கள்.” என்று பதிவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ப்ரொபஷனல் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பியதால் அவ்வாறு அவர் பதிவிட்டதாக ஒரு பதில் கொடுத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் சர்ச்சையாக எழுந்து வரும் நிலையில், ஜெயம் ரவியோ ஆர்த்தி ரவியோ இதுவரை எந்த ஒரு விளக்கமும் மறுப்பும் ஆமோதிப்பும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE