விஜய் டிவியில் ஆங்கர் பிரியங்கா தனக்கென தனி ரசிகர்களை வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே.

அவரது ஸ்பான்டனியஸ் காமெடிகளையும் கலாட்டாக்களையும் ரசித்துப் பார்த்த சில ரசிகர்களே இன்று அவரை வெறுத்துப் பேச காரணமாக ஒரு முக்கியமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதுதான் VJ மணிமேகலையின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை விளக்கி கூறும் வீடியோ.

மணிமேகலை என்ன சொன்னார்?

அந்த வீடியோவில் பேசிய மணிமேகலை ‘ நான் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே சன் மியூசிக்கில் ஆங்கர் ஆக கேரியரை தொடங்கி எனக்கு உடல்நிலை சரியில்லாத கால நிலையிலும் கூட முதலாளாக ஒப்புக்கொண்ட ஷோவுக்கு சென்று எனது வேலையை சிறப்பாக முடித்துக் கொடுத்துவிட்டு உடனேயே பிறரிடம் புரணி பேசாமல் வெளியேறி விடுவேன்.

அப்படி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக நான் போட்ட ஹார்ட்வொர்கின் பலனாக எனக்கு உங்களைப் போன்ற ஏராளமான ரசிகர்கள் அன்பைப் பொழிகிறீர்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் நான் விஜய் டிவியில் கோமாளியாக அறிமுகமானேன்.

நான்கு சீசன்களாக நான் நிறைய கற்றுக் கொண்டேன். மிகவும் பிரபஷனலான புரொடக்ஷன் ஹவுஸ் சிறப்பாக கையாண்டது.

அங்கு பெர்ஃபார்மன்ஸ் ஐ மேம்படுத்துவது, பிறரை பாராட்டி பணி வாங்குவது, என பல விஷயங்கள் தொழில் ரீதியாக கையாளப்பட்டன.

டாமினேட் செய்தாரா பிரியங்கா?

ஆனால் இந்த சீசன் குக் வித் கோமாளியில் பங்கேற்பாளராக வந்த குக் ஒருவர் ஏற்கனவே பிரபலமான ஒரு பெண் ஆங்கர். அவர் எனது ஆங்கரிங் வேலையில் எல்லை மீறி ஓவராக தலையிட்டு உங்களுக்கெல்லாம் என்ன தெரியும் நான்கு சீசனாக நீங்கள் என்ன செய்தீர்கள் நான் செய்கிறேன் பார் என்று ஆங்கரிங் வேலையை அவர் செய்யத் தொடங்கி விட்டார்.

காலையில் எழுந்து பரபரப்பாக கிளம்பி செட்டுக்கு போய் சும்மா நின்றுவிட்டு வருவதற்கு எனக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. அதற்கு நான் வீட்டிலேயே போர்வையை போர்த்தி தூங்கிவிடலாம்.

இதுகுறித்து நிர்வாகத்திடமும் பேசியாச்சு. அவர்கள் அந்தப் பெண்ணிடம் அடிபணிந்து செல்ல வேண்டும் என்பது போன்று என்னிடம் பேசுகின்றனர்.

பெயர் பணம் புகழ் என எந்த காரணத்துக்காகவும் நான் என் சுயமரியாதையை இதுவரை இழந்ததே இல்லை. இனிமேலும் இழக்க தயாராக இல்லை.

எனவே, நான் குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டேன்.

அடி பணிய வைக்க முடியாது

பவர்ஃபுல் ஆங்கர் ஆக அவர் தம்மை நினைத்து கொள்கிறார். அவ்வாறே அடுத்தவர்களும் நினைக்க வேண்டும் என்று அடிபணிய வைக்க பார்க்கிறார்.

ஆனால் அது என்னிடம் நடக்காது.

மீண்டும் ஜீரோவில் இருந்து ஆரம்பித்து ஒரு நல்ல இடத்துக்கு வர எனக்குத் தெரியும். எனக்கு அதற்கான திறமையும் கடின உழைப்பும் இருக்கிறது.

ஆனால், பாவம் அது அவரால் முடியாது போல. அவரது இருப்பை அவர் தக்க வைத்துக்கொள்ள பார்க்கிறார்.

கெரியர் ஸ்பாயில் ஆகும் என மிரட்டல்?

அப்படி பிரியங்கா விடம் மன்னிப்பு கேட்காவிட்டால் கெரியர இழந்து விடுவீர்கள் என்று அந்த புரடக்ஷன் ஹவுஸ் மிரட்டியதாகவும் மணிமேகலை வெளியிட்ட வீடியோவில் தெரிய வருகிறது.

இனியும் வாழ்க்கையை கெடுக்காதீர்

நான் அதிலிருந்து வெளியேறி விட்டாலும் அந்த ஆங்கருக்கு இன்னும் சிறப்பான பல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

ஏனெனில் அவர் பிஸியாக இருந்தால் தான் அடுத்தவரின் வாழ்க்கையை எப்படி கெடுக்கலாம் என்று நினைக்க மாட்டார்.

இதனால் அடுத்து வரும் ஆங்கர்களை போட்டு தள்ளி அவர் தனது இருப்பை நிலைநாட்டிக் கொள்ள முயற்சி செய்யாமல் ஆவது இருப்பார்.

முன்னேற்றம் உழைப்பால் தான் வர வேண்டும்

நான் பேசியது தவறு என அந்தப் பெண் ஆங்கரிடம் ஒப்புக் கொண்டால் மேலும் அதிக புதிய ஷோக்கள் எனக்கு கிடைக்கும் என்று என்னிடம் கூறப்பட்டது.

நான் 15 ஆண்டுகால ஆங்கரிங் வாழ்க்கையில் எனது கடின உழைப்பால் முன்னேறி இருக்கிறேனே தவிர அடுத்தவரிடம் அடிபணிந்து சென்று அதனால் ஒரு முன்னேற்றமோ புதிய ஷோவோ புதிய வருமானமோ கிடைக்கும் என்றால் நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன். ஏனெனில் எனக்கு அனைத்தையும் விட சுயமரியாதை என்பது மிகவும் முக்கியம்.”

என்று தனது ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார் மணிமேகலை.

பழைய ஆங்கர்கள் வெளியேற்றம் ஏன்?

ஏற்கனவே விஜய் டிவியில் ஆஸ்தான ஆங்கராக இருந்த டிடி உள்பட பாவனா ரம்யா என பல ஆங்கர்களும் விஜய் டிவியை விட்டு வெளியேற காரணம் பிரியங்கா தான் என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியே வருகிறது.

விஜய் டிவி நிர்வாகமும் ஆங்கர் பிரியங்காவுக்கு ஆதரவாக செயல்படுவதால் பிற ஆங்கர்கள் அங்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறிவிட்டதாக சிலர் கருதுகின்றனர்.

ஆங்கர் பிரியங்காவால் சீண்ட பட்டதாக சொல்லப்படும் சில ஆங்கர்கள் சத்தமின்றி வெளியேறி விட்டாலும், மானமுள்ள தமிழச்சியாக மணிமேகலை பிரியங்கா எனும் பூனைக்கு மணி கட்டி விட்டதாக சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செல்ஃப் ரெஸ்பெக்ட் என்ற கருத்தை மையப்படுத்தி ஆங்கர் அனிதா சம்பத்தும் அமீர் பாவ்ணி ஜோடியின் தோழியான பெண் ஒருவரும் மணிமேகலைக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இர்ஃபானிடம் பிரியங்கா வாலாட்டாதது ஏன்?

அத்துடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் youtuber இர்பான் பங்கேற்று இருந்தபோதும் ஆங்கர் பிரியங்கா வாலாட்டாத ஒரே ஆள் இர்ஃபான் தான் என்றும், எங்கே நமது குட்டை இர்ஃபான் சோசியல் மீடியாவில் உடைத்து வைத்து செய்து விடுவாரோ என்ற காரணத்தால் இர்பானை குட் புக்கில் வைத்திருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குட்டை உடைத்தாரா மணிமேகலை?

ஆனால் தனது சமூக வலைதளத்தின் மூலம் பிரியங்கா பயந்த ஒரு விஷயத்தை மணிமேகலை செய்து விட்டதாக சிலர் சொல்லுகின்றனர். மணிமேகலையின் இந்த வீடியோ பற்றி உங்களது கருத்து என்ன? பிரியங்கா ஓவராக dominate செய்து விட்டாரா? அல்லது நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஷோவை மேலும் என்டர்டைன் செய்வதாக நினைத்து இவ்வாறு செய்தாரா என கமெண்டில் சொல்லவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

Facebook
Instagram
YOUTUBE