நடிகர் ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையே விவாகரத்துப் பஞ்சாயத்து நடந்து கொண்டிருப்பது ஊரறிந்த விஷயம்.

விவாகரத்து செய்வதாக ஜெயம் ரவியும் அதை மறுப்பதாக ஆர்த்தி ரவியும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இதனிடையே இருவரது குணாதிசயங்கள் பற்றி ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா ஏற்கனவே பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசிய சுஜாதா,
“ஜெயம் ரவிக்கும், ஆர்த்திக்கும் இடையே சண்டை நடக்காமல் இருந்ததே இல்லை. அவர்களுக்குள் நிறைய வாக்குவாதங்கள் வரும். அந்த மாதிரியான சமயங்களில் நான் ரவிக்குத்தான் ஆதரவு கொடுப்பேன். அங்குதான் மேற்கொண்டு பிரச்னையே ஏற்படும். ஆர்த்தி என்னிடம் வந்து, நீ உனது மாப்பிள்ளைக்கு ஆதரவு கொடுக்கிறாயா என்று கேட்பார். ரவி கொஞ்சம் நிதானமானவர். ஆனால் ஆர்த்தி அப்படி இல்லை. சின்ன விஷயத்துக்குக்கூட உடனே டென்ஷன் ஆவாள்.

எனது வீட்டில் எல்லோருமே பெண் பிள்ளைகள்தான். எனக்கு 2 பெண் பிள்ளைகள். என்னுடைய தங்கைக்கு 3 பெண் பிள்ளைகள். அக்காவுக்கு 2 பெண் பிள்ளைகள். இப்படி எங்களை சுற்றி எல்லாமே பெண்கள்தான். அதனால் எங்களுக்கு ஆண்கள் பெரிதாக பரிட்சயமில்லை. முதன்முதலில் எங்கள் வீட்டில் கால் வைத்த ஆண் மகன் என்றால் ரவிதான். பேரன் வேண்டுமென்று வேண்டினேன். அதேபோல் ரவி மூலம் எனக்கு 2 பேரன்கள் கிடைத்திருக்கிறார்கள்” – ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதாவுடைய பழைய பேட்டி தற்போது மீண்டும் வைரல் ஆன நிலையில், இதனைக் கொண்டு சண்டை யாரிடம் தொடங்கியது என்று யூகிப்பது சரியானதாக இருக்காது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர் அந்தணனும் ஜெயம் ரவி ஆர்த்தி ரவியின் பிரச்சினை குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் இரு குடும்பத்துக்கும் நன்கு தெரிந்த பரீட்சையமான நபராக உள்ள குஷ்பு இருவருக்கும் சமாதானம் பேச இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்தணன் அளித்த பேட்டியில் விவரங்கள் இதோ

“”ஜெயம் ரவி இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை நம்பி பணம் போட்டிருக்கும் தயாரிப்பாளர்களும் அதே கேள்வியுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ரவி எடுத்த முடிவு தனக்கு தெரியாது என்று ஆர்த்தி கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசுவதற்காக ரவியின் வீட்டுக்கு சென்று அவர் எங்கே என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்களோ, எங்களுக்கு அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த சில காலமாகவே தான் எங்கே இருக்கிறேன் என்ற பதிலை ஒழுங்காக சொல்லவில்லை. இப்போ எங்களிடம் கேட்டால் என்னம்மா சொல்வது என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் அநேகமாக குஷ்பூ பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் குஷ்பூ வெளிநாடு டூருக்கு ஒருமுறை சென்றார். அப்போது அவருடன் செல்லும்போதுதான் ஆர்த்தியும், ரவியும் முதன்முறையாக பழக்கமானார்கள். ஏனெனில் ஆர்த்தி தரப்புக்கு குஷ்பூ ஏற்கனவே பழக்கம். சிங்கப்பூருக்கு சென்றபோதுதான் ஆர்த்தி தனது காதலை ரவியிடம் சொன்னார். பிறகு கொஞ்ச காலம் கழித்து ரவியும் ஒத்துக்கொண்டார். எனவே இந்தத் திருமணத்துக்கு முழு காரணம் குஷ்பூதான். அதனால்தான் அவர் இருதரப்பிடமும் பேசலாம் என்று சொல்கிறார்கள்” என்றார்.

ஆர்த்தியின் அறிக்கைக்கும் குஷ்புவுக்கும் என்ன தொடர்பு?

ஆர்த்தி அளித்திருந்த விளக்கத்துக்கு குஷ்பூ இன்ஸ்டாகிராமில் லைக் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இருவரும் சேர்ந்து வாழ்வதுதான் குஷ்புவின் விருப்பம் என்று வெளிப்படுகிறது.

ஒருவேளை இவர்களது காதலுக்கு பிள்ளையார் சுழியாக அமைந்த குஷ்புவே இவர்களை இணைத்து வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

Facebook
Instagram
YOUTUBE