மாமியாரோடு சம்பள பிரச்சனையா? விவாகரத்து சர்ச்சைக்கு காரணம் என்ன?

நடிகர் ஜெயம் ரவியும் அவரது காதல் மனைவி ஆர்த்தி ரவியும் விவாகரத்து பெறுவதாக சர்ச்சை எழுந்தது.

நடிகர் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி திருமணம் செய்ய வேண்டி ஆர்த்தி ரவி மிகவும் தனது வீட்டில் போராடி பர்மிஷன் வாங்கியதாகவும் திருமண சமயத்தில் பல தகவல்கள் பரவின.

சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக தகவல் கசிந்ததும் ஆர்த்தி ரவி அதனை பொய்ப்பிக்கும் விதமாக தனது ஸ்டேட்டஸில் 20 ஆண்டு ஜெயம் படத்தின் போஸ்டரை பதிவிட்டு ஜெயம் ரவிக்கு வாழ்த்து கூறியிருந்தார்.

இது வெறும் வதந்தி என அவரது ரசிகர்கள் மனதில் சந்தோஷம் வரத் தொடங்கியது.

ஆனால், அந்த சந்தோஷத்தை நொறுக்கி போடும் விதமாக ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த கணவர் ஜெயம் ரவியுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.

இது வெறும் வாய்க்கு அவல் பொரி கொடுத்தது போல சமூக ஊடகங்களில் ஆளாளுக்கு சில கணிப்புகளை வெளியிட்டு பேசத் தொடங்கி விட்டனர்.

ஆர்த்தி ரவியின் instagram கணக்கில் அவரது பின் பெயர் ரவி என்பதை மாற்றாமல் அப்படியேதான் உள்ளது.

பயோ டேகில் கூட ‘மேரிடு டு ஜெயம் ரவி’ என பதிவிட்டுள்ளார் ஆர்த்தி ரவி.

Q&A என்ற பெயரில் எழுப்பிய கேள்விகளுக்கும், “உங்கள் எதிர்காலம் பற்றி கவலை கொள்ளுங்கள். அடுத்தவர் எதிர்காலத்தை பார்த்து உங்கள் எதிர்காலத்தை தொலைத்து விடாதீர்கள்” என்று ஆர்த்தி ரவி பதில் அளித்ததாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், வேறொரு தகவலும் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், சைரன் திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை வைத்து பாண்டியராஜன் இயக்கத்தில் ஆர்த்தி ரவியின் அம்மாவும் தயாரிப்பாளருமான சுஜாதா படம் எடுக்க இருப்பதாகவும் அதற்கு ஜெயம் ரவி 25 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் இந்த சம்பளம் கொடுக்க முடியாது என்று மாமியார் பேசியதால் சங்கடம் நேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அத்துடன் ஜெயம் ரவி மாமியாரின் வளர்ப்பு மகனான சங்கர் தான் தயாரிப்பு பணிகளை பார்த்து வருவதால் அவருக்கும் ஜெயம் ரவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும், அந்த கோபத்தை ஜெயம் ரவி ஆர்த்தி ரவி மீது காட்டியதாகவும் சில சமூக வலைதளங்களும் தகவல் பரப்பி வருகின்றனர்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE