நடிகர் சிவகார்த்திகேயன் தான் தனது விவாகரத்துக்கு காரணம், என்பது போல இசையமைப்பாளர் டி இமான் பரபரப்பாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நடந்த இந்த சம்பவத்தில் “சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். என்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் கருதி அதை எல்லாம் வெளியே சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஜென்மத்தில் இனிமேல் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன்” என பேட்டியளித்து இருந்தார்.

இந்த விவகாரம் ஆனது பூதாகரமாக வெடித்தது. டி இமான் முதல் மனைவியும் சிவகார்த்திகேயன் மீது எந்த தவறும் இல்லை என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி இமானும் தானும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் சிவகார்த்திகேயன் முயற்சித்ததாக கூறியிருக்கிறார்.

இது பற்றி சிவகார்த்திகேயனின் கருத்து என்ன? என பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் அவர் மௌனமாகவே இருந்தார்.

இதை அடுத்து வலை பேச்சு என்ற youtube சேனலில் சினிமா ரிப்போர்ட்டர் பிஸ்மி உள்ளிட்டோர் சிவகார்த்திகேயன் டி இமானின் வாழ்க்கையை சீரழித்ததற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது நான் அதை பார்த்தேன் என பேசியது எல்லாம் புயலை கிளப்பியது.

இதை அடுத்தும் சிவகார்த்திகேயனின் மௌனம் பற்றி பலரும் தவறாகவே பேசினர்.

விவகாரம் இவ்வளவு பெரிதான பின்பு சிவகார்த்திகேயன் “இல்லை” என்று ஒரு மறுப்பாவது தெரிவித்து இருக்கலாம் என்று பலரும் கூறி வந்தனர்.

இருப்பினும் சிவகார்த்திகேயன் மௌனமாக இருந்தது மட்டுமின்றி தீபாவளிக்கு தனது குடும்பத்தோடு கொண்டாடிய புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இதன்படி வேறு ஒரு நபருடைய மனைவியை இணைத்து சிவகார்த்திகேயன் பேசப்பட்ட போதும் அவர்களது குடும்பத்தில் எந்த ஒரு சலனமும், அமைதியின்மையும், சண்டையும் இல்லை என நிரூபிக்கும் வகையில் அந்த புகைப்படம் அமைந்திருந்தது.

இந்த நிலையில் தான் பொங்கல் விடுமுறைக்கு பெரிதளவில் எதிர்பார்க்கப்படும் அயலான் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் சிவகார்த்திகேயன் மௌனம் கலைத்திருக்கிறார்.

அப்போது மேடையில் கடைசியாக பேசிய சிவகார்த்திகேயன் “பொங்கல் விடுமுறை, பெரிய விடுமுறை. அந்த விடுமுறைக்கு கேப்டன் மில்லர் லால் சலாம் என எத்தனை படம் வந்தாலும் எல்லா படமும் வெற்றி பெறட்டும்.அடிச்சு துவம்சம் பண்ணட்டும்” என சிவகார்த்திகேயன் பேச அவரது ரசிகர்கள் ஆரவாரித்தனர்.

“என்னை சிலர் சூப்பர்னு சொல்லுவாங்க, சிலர் இன்ஸ்பிரேஷன்னு சொல்லுவாங்க. சில பேரு திட்டுவாங்க. ஆனா நான் இதையெல்லாம் எடுத்து கொள்வதே இல்ல. என ஹேட்டர்ஸ்க்கு, நான் ஒண்ணுமே சொல்ல விரும்பவில்லை. என்ன புடிச்சவங்களுக்காக எப்போதும் நான் என் பாதையில ஓடிட்டே இருக்கேன்.” என சிவகார்த்திகேயன் மிகவும் பாசிட்டிவிட்டியோடு தனது பேச்சை முடித்துள்ளார்.

ஆக மொத்தம் நீங்க என்ன வேணா கத கட்டி விடுங்க ஆனா நான் என் வேலையை பார்த்துட்டு என் வழியில போயிட்டே இருக்கேன். . ஆங். . அப்படின்னு சொல்லி சிவகார்த்திகேயன் தன்னோட உரையை முடித்திருக்கிறார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE