சின்னத்திரை மற்றும் பெரிய திரைகளில் பப்லு என செல்லமாக அழைக்கப்படுபவர் பப்லு பிரித்திவிராஜ்.

இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சன் டிவியில் வெளியாகும் பல சீரியல்களிலும் தற்போது வரை நடித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை இருந்தது.

அதனை ஒற்றைத் தந்தையாக அவர் தனியாக வளர்த்து மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

அந்த குழந்தையின் பிரிவையடுத்து தனிமையில்தான் இருந்தார் பப்லு பிரத்விராஜ்.

சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தான் தான் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்க என்னுடைய மனைவிதான் காரணம் என கூறி ஒரு இளம் பெண்ணை மேடை ஏற்றினார். அவர் 23 வயதான மலேசியப் பெண் ஷீத்தல் ஆவார்.

பின்பு “இந்த வயதில் தான் திருமணம் செய்து கொண்டதில் என்ன தவறு இருக்கிறது? நடிகர்களுக்கு என தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது, எனக்கு வயது இருக்கிறது, அதனால் நான் திருமணம் செய்து கொண்டேன்” என பிரித்திவிராஜ் பல பேட்டிகளில் விளக்கங்களையும் கொடுத்திருந்தார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் லிவிங் டு கெதர்ரில் இருந்ததாக கூறிவந்தனர். இந்த நிலையில் பப்லுவும் சீதலும் இணைந்து வீடியோ பதிவிட்டு வந்த ஒரு சமூக வலைதளத்தில் இருந்து சீத்தல் பப்லுவின் வீடியோக்களையும் போட்டோக்களையும் நீக்கியுள்ளார்.

அவர் சமீபத்தில் பதிவிட்ட ஒரு டான்ஸ் வீடியோ ரீல்ஸில், இருவரும் பிரிந்து விட்டதாக நினைக்கிறேன் என பயனர் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

இதற்கு ஷீத்தலும் அந்த கமெண்டை லைக் செய்துள்ளார். இதனால் பப்லு உடனான பிரிவை ஷீத்தல் ஆமோதித்து விட்டதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

54 வயதில் 23 வயது பெண்னை திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்ட பப்லு, இது குறித்து எந்தவித பதிலும் இதுவரை கூறவில்லை.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE