பொதுவாக ஒரே ஒரு படத்தில் சேர்ந்து நடித்து விட்டால் கூட ஹீரோ ஹீரோயினுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிடும்/ அப்படி வெள்ளித்திரை ஜோடிகளாக இருந்து நிஜ ஜோடிகளாக மாறிய தம்பதிகள் பலரை பார்த்திருப்போம். ஆனால் அவர்களில் இன்றளவும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் ஒரு சில தம்பதிகள் அன்யூன்யத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் குறிப்பிடத்தக்க முக்கியமான ஜோடி அஜித்குமார்-ஷாலினி. ஷாலினி சிறுவயதிலிருந்து குழந்தை நட்சத்திரமாக மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அவர் கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் அலைபாயுதே படத்திற்காக அரசின் சிறந்த நடிப்புக்கான விருதைப் பெற்றவர் ஷாலினி.

ஒரு சில படங்களில் மட்டும் தான் ஹீரோயினாக நடித்தார். இதை அடுத்து திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து ஓய்வில் இருக்கிறார் ஷாலினி.

நடிகர் அஜித்குமார் ஷாலினி ஆகிய இருவரும் காதலிக்கும் போது நடிகர் அஜித்குமார் ஷாலினியின் தந்தையான பாபுவிடம் சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் அஜித் மீது நம்பிக்கை இன்றி இருந்ததால் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் தனது மகளை திருமணம் செய்வது பற்றி ஆலோசிப்பதாக அவரது தந்தை கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இது நடிகர் அஜித்குமார் தனது மகள் ஷாலினி மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்? பணத்தை பெரிதாக மதிக்கிறாரா? அவர் காதலிப்பதாகக் கூறுவது உண்மையா? என பல சந்தேகங்களை தீர்க்கும் பொருட்டு அவர் இப்படி ஒரு சோதனையை வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் நடிகர் அஜித்குமார் சற்றும் யோசிக்காமல் ஒரு கோடி ரூபாயை ஷாலினியின் தந்தை பாபுவிடம் கொடுத்து அந்த சந்தேகத்தை தீர்த்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து தான் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பாபுவும் அவரது தாய் அலைஸ்-ம் முடிவு செய்திருக்கின்றனர்.

அஜித்-ஷாலினிக்குத் திருமணம் ஆகி 23 ஆண்டுகள் முடிந்துள்ளன. இருவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உள்ளனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE