50 வயசான 50 KG தாஜ்மஹாலுக்கு அப்ஸ் & டவுன்ஸ்

அவ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா? என அழகுக்கு ஒரு இலக்கணம் என்றால் அது அவர் தான். அந்த 50 KG தாஜ்மஹாலுக்கு 50 வயது. ஒரு மாடலாக இருந்து உலக அழகியாக நடிகையாகி தற்போது இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் இந்தியாவுக்கே ரெப்ரசன்ட் செய்யும் அளவு ஒரு அழகிய முகமாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய்.

உலக அழகிக்கு முன் ஐஷூ

ஓப்ரா வின்ஃப்ரே, மேடம் டுசாட் மியூசியத்தில் ஒரு அழகிய மெழுகுச்சிலை, கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலில் ஜூரி பதவி என இது அனைத்தையும் பெற்ற முதல் இந்திய நடிகை என்று புகழை பெற்றிருப்பவர் ஐஸ்வர்யா ராய். அதுமட்டுமின்றி நெதர்லாந்தில் ஒரு தோட்டத்தில் ஒரு டூலிப் மலருக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் சூழ்நிலை காரணமாக அவர் டான்சர் ஆனார்.

பெப்சி மற்றும் கோக்ககோலாவில் நடித்த ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

ஐஷூவின் டெடிகேசன்

டோலாரே டோலா என்ற தேவதாஸ் பட பாடலில் நடனம் ஆடும் போது அதிக எடை உள்ள கம்மல் போட்டதால் ரத்தம் வரவர அப்படியே சுழன்று நடனமாடியவர் ஐஸ்வர்யா ராய். வேலையில் அவ்வளவு டெடிகேசன்.

ஒரு தாயான பின்பு சிறிது காலம் திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெற்றார். இருந்தாலும், விளம்பரங்களில் நடித்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

1994 இல் உலக அழகி பட்டம் பெற்ற போதும், 1997இல் இருவர் என்ற படத்தில் தான் முதன்முறையாக அவர் அறிமுகமாகினார். இதை அடுத்து ஜீன்ஸ் படத்தில் நடித்த அவர், தேவதாஸ், ரெயின் கோட், பிரைட் அன்ட் பிரிஜூடைஸ், ஜோதா அக்பர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ராவணன் படத்திலும் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று இரண்டு படங்களிலும் ஹீரோயினாக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஐஸ்வர்யா ராய்.

ஐஷுவின் சறுக்கல்

ஐஸ்வர்யா ராய் மிகப் பிரபலமானவர். அவரது வாழ்க்கை வெற்றிகரமாக தெரிந்தாலும் அவரது வாழ்விலும் பல சோகங்கள் உள்ளன. அவரது தொழில் வாழ்க்கையை கெடுப்பதற்காகவே சல்மான் கான் என்ற நடிகர் வந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சல்மான்கான் உடன் இணைந்து நடித்த ஐஸ்வர்யா ராய் அவருடன் உறவில் இருந்ததாக கூறப்பட்டது.
சல்மான் கான் தன்னை உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் காயப்படுத்துவதற்காக ஐஸ்வர்யாராயே கூறியிருந்தார்.

இதனால் அவரை விட்டுப் பிரிந்த பின்பு அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பட வாய்ப்புகளை சல்மான்கான் தனது இன்ஃப்ளூயன்சை பயன்படுத்தி கெடுத்ததாகவும் கூறப்பட்டது. சல்மான் கான் பிரேக் அப் செய்த பெண் விவேக் ஓபராய் என்ற நடிகரை ஐஸ்வர்யா ராயைக் காதலித்ததாகவும், ஆனால் சல்மான் கான் அவரை மிரட்டி கொன்று விடுவதாக அச்சுறுத்தியதால் ஐஸ்வர்யா ராயை விட்டு அவர் விலகியதாகவும் கூறப்பட்டது. இதை அடுத்து அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பிரச்சனை ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து அவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகளும் உள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE