பிக்பாஸ் வீட்டுக்குள் விஷ்ணுவின் முரட்டுத்தனத்தால் சரியான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிக்பாஸ் சீசன் 7 தமிழில் 23-வது நாள் டமாலு, டுமீலு பாடலோடு விடிந்தது.

மணி ரவினா ஜோடி போல தனியாக இப்போது நிக்சன் – ஐஷு ட்ராக் ஒன்று கிளம்பத் தொடங்கியுள்ளது.

“நமக்குள்ள ஒன்னும் இல்லண்ணு இந்த உலகத்துக்கு அறிவிச்சுடலாமா?” என நிக்சன் கேட்க “நாங்க ஒண்ணுமே நினைக்கவில்லைன்னு அவர்கள் சொல்லிட்டா?” என்ன பண்றது என அதிஷ்டம் கூறிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் ரவீனா வந்து “நாங்க ஒன்னா பேசிகிட்டு இருக்குறத வச்சு கலாய்ச்சி முத்திரை குத்தறீங்கல்ல? அதுபோல யார் பண்ணாலும் நானும் குத்துவேன். நீ பண்ணாலும் குத்துவேன். யார் கூடயும் எமோஷனலா கனெக்ட் ஆகாத-ன்னு ஒரு மகான் என்கிட்ட சொல்லி இருக்காரு” என்று டெரராக சொல்லிச் சென்றார் ரவீனா.

அடுத்து இந்த வாரத்துக்கான ஆடை தியாகம் செய்யும் டாஸ்க் தொடங்கியது. இதில் தோற்றால் பெரிய வீடு உடைகளை தியாகம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 2 வீட்டில் இருந்தும் தலா ஒருவர் வந்து ஆட வேண்டும் என்று நிபந்தனை இருந்தது. எப்படி இருந்தாலும் சின்ன வீட்டுக்காரர்கள் தோற்றால் அவர்கள் அடை தர வேண்டியது இல்லை.

செங்கற்களை துரிதமாக சிறிய சுவற்றின் இடைவெளியில் கை மாற்றிக் கொள்ள வேண்டும். நாக்குத் தள்ளத் தள்ள யுகேந்திரனும் மாயாவும் விளையாடியும்கூட “முடிக்க முடியல ஏதாவது டிஸ்கவுண்ட் பண்ணுங்க பிக் பாஸ்” என்று தோல்வியிலும் ஒரு டிஸ்கவுண்ட் கேட்டார் மாயா.

இதை அடுத்து வீட்டில் உள்ள யாரேனும் 5 பேர் மட்டும் வந்து ஆடைகளை விட்டுக் கொடுக்குமாறு பிக்பாஸ் கேட்டார். கூல் சுரேஷ் தாமாக முன்வந்து கையை உயர்த்தி தனது ஆடையை விட்டுக் கொடுப்பதாக கூற அடுத்தடுத்து 4 பேரும் தங்களது ஆடையை விட்டுக் கொடுக்க முன்வந்தனர். அவர்கள் 5 பேரையும் தனியாக நிற்கச் சொன்ன பிக் பாஸ் இவர்கள் 5 பேர் தவிர மற்றவர்கள் அனைவரும் பெரிய வீட்டில் இருந்து ஆடைகளை கொடுக்க வேண்டும் என பிக் பாஸ் குறிப்பிட்டார். இது அவர்களுக்கு பயங்கர ட்விஸ்ட் ஆகி போனது

நாம் மட்டும் ஜோடியில்லாமல் இருக்கிறோமோ, கன்டென்ட் கொடுக்க வேண்டுமே என கவலைப் பட்ட பூர்ணிமாவோ, பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனான சரவண விக்ரமிடம் சென்று “நீ ரொம்பஎஅழகா இருக்க” என வழிந்து தள்ளினார் பூர்ணிமா. இதை அடுத்து மற்றொரு டாஸ்க் தொடங்கியது

அது செல்போன் போன்ற வடிவில் உள்ள அட்டை போனில் ஒவ்வொருவரின் புகைப்படம் இருக்கும். அனைவரும் ஓடிச்சென்று யாராவது ஒருவரின் புகைப்படத்தை எடுத்து சார்ஜ் போட வேண்டும். ஆனால் அவரவர்களின் புகைப்படம் எடுக்கக் கூடாது. இதில் எந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள் அவர்களுக்கு 2 கோல்டன் ஸ்டார்கள் கிடைக்கும் என்றும், அவர்கள் இதனை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்தார்.

யாருடைய படம் போட்ட ஃபோனில் சார்ஜ் இல்லையோ அவர்கள் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதேபோல் முதலில் யுகேந்திரன் மணி பிரதீப் ஆட்டத்தில் இருந்து வெளியேறினர். இது பிறருக்காக விளையாடும் போட்டி. இருந்தபோதும் டார்கெட் செய்து பிறரை வீழ்த்தினர். விஷ்ணுவின் டார்கெட் அக்ஷயா. இருவரும் ஒரே போனைப் பறிக்க முயன்றதில் விஷ்ணு தோற்றுப் போக, அவர் சண்டைக் கோழியாக மாறி ரவுண்டு கட்டி சண்டையிட்டடார். அக்ஷயாவை மரியாதை இல்லாமல் விஷ்ணு போடி – வாடி என பேசியது இன்றைய நாளில் சர்ச்சையாகி போனது. பிரதீப் உள்ளிட்டோர் வந்து விஷ்ணுவை சமாதானம் செய்தனர். பின்னர்,

அடுத்த சுற்றில் விசித்ரா, ரவீனா, பூர்ணிமா, மாயா ஆகியோர் வெளியேறினர். ஐசுவும் நிக்கனும் டீல் போட்டுக் கொண்ட போது விக்ரமும் அக்ஷயாவும் ரகசியம் பேசி திட்டம் தீட்டினர். இதைப்பார்த்த கேப்டன் பூர்ணிமா அதில் இருந்த புகைப்படத்தை எடுத்து கவிழ்த்து வைத்து பிக்பாஸிடம் பாராட்டு பெற்றார்.

பின்பு அனைவரும் ஓடிச்சென்று சார்ஜ் போட இறுதியில் வென்றது ஜோவிகாதான். அவருக்கு 2 ஸ்டார்கள் வழங்கப்பட்டன.

முந்தைய நானின் எபிசோடை காண இங்கு கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE