பிக் பாஸ் சீசன் 7-ல் இந்த வாரம் உள்ளே வந்ததும் கவுச் பொடேடோ பற்றி பேசினார் கமல். எந்த உடல் உழைப்பும் இல்லாமல் இருப்பதால்தான், இளம் வயதினருக்கு ஹார்ட் அட்டேக் வருவதாகக் கூறினார் கமல்.

பின் திலைவரான பூர்ணிமாவுக்கு வாழ்த்துக்கள் கூறிய பிக்பாஸ் நீங்க சேவ்டு என்றார். உரிமைக் குரலுக்கான சிவப்புத் துணி முதுகு துடைக்கத்தான் பயன்படுத்துகிறீர்களா? ஏன் அதை யாரும் பயன்படுத்தவில்லை எனக் கேட்டார். பின்பு உருவக் கேலி செய்யும் கூல் சுரேஷ் பற்றி பேச்சு எடுக்க பலரும் தொடர்ந்து கம்ப்ளெய்ன்ட் செய்தனர்.

உருவக்கேலி தற்போதெல்லாம் திரைப்படங்களில் கூட அனுமதிக்கப்படுவதில்லை என்றார் கமல். “பிள்ளையாகவே இருந்தாலும் இன்றைய தேதியில் பெற்றோர் கூட உருவக் கேலி செய்ய அனுமதியில்லை. முதிர்ச்சியற்ற இளைஞர்கள் உங்கள் ஜோக்குக்கு வெளியே சிரிக்கலாம் இங்கே அப்படி இல்லை. வீட்டில் இருப்பவர்கள் பார்ப்பார்கள் என்று அழுகிறீர்களே, இதுவும் என் வீடுதான், இங்கு நடப்பதை நானும் கவனிக்கிறேன்“ எனக் கூறினார்.

பின், ஆக்ரோஷமாக நடந்து கொண்டதைப் பற்றி யாருமே புகார் கூற முன்வராததால் அந்த டாபிக்கை தானே கையில் எடுத்தார் கமல்ஹாசன். கழுத்துலயே அடிக்குறான் சார் என விஷ்ணு கூற, பிளாக்குக்கும், லாக்குக்கும் வித்யாசம் தெரியல என தற்காப்புக் கலைத் திறமையைப் பற்றி விளக்கம் கொடுத்தார் விஜய். ஆனால், அது ஏற்கத்தக்கதாக இல்லை.

“கண்ணாடி உடைந்து அடியே பட்டாலும், ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்துக் கொண்ட பிரதீப்புக்கு வாழ்த்துக்கள்“ என கமல் கூற, ஆடியன்ஸ் தரப்பில் இருந்து கைதட்டல் கிடைத்தது. இதன்மூலம் பிரதீப் கோக்குமாக்காக ஸ்ட்ரேட்டஜி போட்டு ஜெயித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

பின்பு இகிகாய் என்ற ஜக்கானியர்களின் அதிக காலம் வாழும் அதிசய கிராமம் பற்றிய புத்தகத்தை கமல் பரிந்துரைத்தார். அங்குள்ளவர்கள் தங்களுக்குப் பிடித்ததைத்தான் செய்வார்கள் எனக் கூறினார். மேலும் அங்கு உள்ளவர்கள் பழங்களைத்தான் அதிகம் உண்பார்கள் என்பதை கமல் சொல்லாவிட்டாலும் த காரிகை உங்களுக்கு சொல்கிறது.

பின்பு எலிமினேட் ஆவது யார் என்ற அறிவிப்புக்கு முன் யார் வெளியேறுவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. அதில், விஜய், வினுஷா ஆகியோரில் வினுஷா பெயரே அதிகம் பேர் சொன்னார்கள். ஆனாலும் ரவீனா, விஜயின் பெயரை சொன்னார்.

ரவீனா சொன்னபடியே விஜய் வெளியேறினார். தன்னை முரடன் என மக்கள் நினைத்திருக்கலாம் என விஜய் உண்மையை ஒப்புக் கொண்டார்.

இந்த வாரத் தலைவர் ஆன பூர்ணிமா யார் யார் சின்ன வீட்டுக்கு ஷிஃப்ட் ஆகிறார்கள்? என தேர்ந்தெடுத்தார். மணி, யுகேந்திரன், ஜோவிகா, நிக்சன், பிரதீப் மற்றும் அக்ஷயா சின்ன வீட்டுக்கு சென்றனர்.

தனது தோழி மாயாவை சின்ன வீட்டில் இருந்து மீட்டார் பூர்ணிமா. இனி நேரம் காலம் பார்க்காமல் புறணி பேசலாம் என நினைத்தாரோ, என்னவோ.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE