BB Day 19 – சோத்துல சாம்பாரா? கடுப்பான பிக்பாஸ் டீம்

‘வேர் இஸ் த பார்ட்டி’ பாடலுடன் விடிந்தது பிக்பாஸ் சீசன் 7 தமிழின் 19-வது நாள். ஒரு காப்பி குடுக்க மாட்டேங்குறாங்க என பவா செல்லதுரையை புலம்பவைத்து விரட்டிய விசித்ரா, அதே காஃபி கொடுக்க நேரம் ஆவதாகக்கூறி புலம்பிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து எல்.கே.ஜி. குழந்தை அம்மாட்ட போகனும் எனக் கூறி அழுவது போல அழுது கொண்டிருந்தார் பாரதி கண்ணம்மா நாயகி வினுஷா. இப்டி அழுதுட்டே இருந்தா போயிட்டு வான்னு அனுப்பி வெச்சுருவாங்க. அரவணைக்குற சூழல் அதாவது கம்ஃபோர்ட் ஸோன்லயே இருந்துட்டா பழகிடும். இதுமாதிரியான சூழல்லயும் வாழ கத்துக்கிட்டாதான் போராட்ட குணம் வரும் என பிரதீப்பும் விசித்ராவும் அட்வைஸ் செய்தனர்.

பின் கன்ஃபெசன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். பின்பு வெளியே வந்த வினுஷா தான் வெளியே செல்வதாகக் கூறி சிரிக்க பிரதீப் அந்த பிராங்கை நடத்த விடாமல் போட்டு உடைத்தார்.

பிரியாணி எல்லாம் வெளுத்து கட்டிட்டு சப்பாத்திக்கு மட்டும் ஆயில் போடாம சுட்டுக் கொடுக்கனும்னா எப்படி என சுரேஷ் அக்ஷயாவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அடுத்ததாக பட்ஜெட்டுக்கான டாஸ்க்கை ஆரம்பிக்கப் போவதாகவும், தோற்கும் வீட்டுக்கு சோறு கிடையாது என்றும் பிக்பாஸ் கூற, அனைவரும், வெந்தும், வேகாததுமாக இருந்த சோற்றை வாங்கி வாயில் போட்டுக் கொண்டிருந்தனர்.

டாஸ்க் ஆரம்பித்தது. தூக்கிப் போடும் பந்து கீழே விழுவதற்குள் பஸ்ஸிலை சரியாகப் பொருத்த வேண்டும். இதில் பெரிய வீடு தோற்க, வீடே வருத்தத்தில் ஆழ்ந்தது. இதையடுத்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை தட்டைக் கீழே வைக்குமாறு பிக்பாஸ் உத்தரவுபோட, வருத்தம் அதிகரித்தது.

பின்பு, சோத்துலயே கைவச்சுட்டாரே, சோறு இல்லாம என்ன பண்ணுறது? என புலம்பிக் கொண்டிருந்தனர். தான் இதற்கு ஐடியா சொல்வதாகவும் ஆனால், அதற்கு விசித்ரா தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், என்னை அடுத்த முறை கேப்டனாக்க வேண்டும் என்றெல்லாம் பிரதீப் முன்வைத்த ஸ்ட்ரேட்டஜியை யாருமே ஒப்புக் கொள்ளவில்லை.

இதையடுத்து, உங்களுக்கு சோறு போடாமல் இருப்பேனா என தாயைப் போல பாசமாகப் பேசிய பிக்பாஸ், ஷாப்பிங் அறைக்கு செல்லுமாறு கூற, பசியில் பிரியாணியை மனதில் நினைத்துக் கொண்டே அங்கு சென்ற பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களோ ஏமாந்து போயினர்.

அங்கு ஜெயிலில் வைப்பது போல அலுமினியத் தட்டில் சாம்பார் சாதமும், ஊறுகாயும் வைக்கப்பட்டது. இருந்தபோதும் பசியில் இருந்த போட்டியாளர்கள் அதையும் விடாமல் சாப்பிட்டதைப் பார்க்க சற்று பாவமாகத் தான் இருந்தது.

ஏற்கெனவே 2 நாட்கள் ஆடைகளைப் பறித்து வைத்திருந்ததால் ஒரே ஆடையே போட்டியாளர்கள் அணிந்து இருந்தனர். இதனிடையே ஒரு ஃபேசன் ஸோ நடத்தப்பட்டது. அதில், வினுஷாவைத் தூக்கிக் கொண்டு நடந்தது, கடலையின் தோலை பாக்கெட்டில் இருந்து ஊதி விட்டது, மைக்கை மாலை போல போட்டு நடந்தது என கூல் சுரேஷ் செய்த குறும்புத்தனம் அந்த ஜோடிக்கு பரிசை பெற்றுத் தந்தது.

எப்படியும் இன்று கமலின் வருகை வேறு இருக்கும் என்பதால் எலிமினேஷனை நினைத்துக் காத்திருந்தது பிக்பாஸ் வீடு.

முந்தைய நாள் எபிசோட் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE