“பொட்டு ஏன் வைக்கல?” சர்ச்சையில் சிக்கிய நல்லி சில்க்ஸ்

சோத்துல சாம்பாரா? என்பது போல் நெத்தியில பொட்டு இல்லையா? என சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது நல்லி சில்க்ஸிக் விளம்பர படம். பொதுவாகவே நல்லி சில்க்ஸ் என்பது பாரம்பரியமிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

அங்கு வந்து செல்லும் பெண்களும் வெகு காலமாக ஒரே கடையில் புடவை, ஆடைகளையும் வாங்கி வந்துள்ளனர். அத்தகைய பாரம்பரிய மிக்க நல்லி சில்க்ஸில் தற்போது வந்துள்ள விளம்பரம் ஒன்று சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

அதில் புடவை அணிந்த பெண் ஒருவர் காட்சியளிக்கிறார். ஆனால் அவர் கண்களிலும் முகத்திலும் சற்றும் புன்னகை இல்லை. அவர் அணிந்திருக்கும் புடவை கூட கோணல் மானலாகவே கட்டப்பட்டுள்ளது. சரியாக அணியப்படவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்

இருந்த போதும் அந்த மாடல் அழகி நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவில்லை?என்று தற்போது இணையதளங்களில் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். சில நேரங்களில் விளம்பரங்களும் இதுபோன்று சர்ச்சைகளில் சிக்குவது உண்டு.

அந்த வகையில் நல்லி சில்க்ஸ் தற்போது இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருந்தபோதும் வீணா என்று பயனர் எக்ஸ் தளத்தில் நல்ல சில்க்ஸின் மாடல் அழகி ஏன் பொட்டு வைக்கவில்லை என்று தான் ஏற்கனவே கேட்டதாகவும் அவர்கள் அனைத்து தரப்பினருக்கும் மரியாதை செய்யும் வகையில் இவ்வாறு எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர், என்று பதில் அளித்தார்.

இருப்பினும் ஏன் பொட்டு இல்லை? ஏன் புடவை சரியாக அணியவில்லை? கண்களை உருத்தாத சில அணிகலன்கள் மட்டுமே அணிந்த போதும் ஏன் அதிக நகை இல்லை? என்றெல்லாம் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

துக்கத்தில் இருக்கிறாரா? இறுதிச்சடங்குக்கு செல்கிறாரா? குங்குமம் இல்லை என்றால் பிஸ்னஸ்சும் இல்லை என ஒரு சிலர்கள் ஒரு அடி மேலே போய் சற்று அதிகமாகவே விமர்சித்து வருகின்றனர். நல்லி சில்க்ஸ் இப்படி எல்லாம் செய்யும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு புறாவுக்கு போரா என்பது போல் நெற்றியில் ஏன் பொட்டு இல்லை? என்பதை தெரிவித்து நல்லியின் விளம்பர படம் தற்போது பிரச்சினையாக மாறி உள்ளது. இது பற்றி உங்கள் கருத்தையும் கமென்ட் செக்சனில் தெரிவிக்கவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE