திரைப்படத் தயாரிப்பாளரான ரவீந்திரன் சன் மியூசிக்கில் விஜேவாகவும், சீரியல் நடிகையாகவும் இருக்கும் மஹாலக்ஷ்மியை காதலித்து கரம் பிடித்தார். இவ்வளவு அழகான பெண், இவ்வளவு குண்டான, கருப்பான ஆளைத் திருமணம் செய்துவிட்டாரா? என பலரும் விமர்சித்தனர்.

இந்தச் சம்பவம் ஒரு அதிசயம் போல உலகளவில் ஊடகங்களால் விமர்சனத்துக்கு ஆளானது. பணத்துக்காகத்தான், திருமணம் செய்து கொண்டதாக மகாலக்ஷ்மியை பலரும் வசை பாடி வந்தனர். இதெல்லாம் பொறுக்காத்தனம் என பலரும் விமர்சிப்பவர்களைத் திட்டினர்.

இருவரும் சமூக வலைதளங்களில் தங்களது ரொமான்டிக் ஆன புகைப்படங்களைப் பதிவேற்றி வந்தனர். இதிலும், தொடர்ந்து விமர்சிக்கப்பட்டாலும் அசால்டாக தங்களது லவ்வைத் தொடர்ந்து வந்தனர்.

இதனிடையே, பண மோசடி வழக்கில் கைதானார். புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பல ஆண்டு மோசடி என்பதால் அவருக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. சில முறை நீதிமன்றமும் ஜாமின் மனுவை நிராகரித்தன.

இதனிடையே ஜாமின் கிடைத்தபின் வெளியே வந்த அவர், வீடியோவில் பேட்டி கொடுத்துள்ளார். “புழல் சிறைக்கு சென்று கதவைப் பார்த்ததுமே பயந்துவிட்டேன். சிறையில் என்னால் இருக்கவே முடியவில்லை, அங்கு என்னால் பாத்ரூம் கூட போக முடியவில்லை. மிகுந்த மனவேதனையாக இருந்தது. அவ்வளவு சிரமமாக இருந்தது. சாப்பிடவும் முடியவில்லை. இதனால் தான் செத்தே போய்விடலாம் என நினைத்தேன்” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “மஹாலக்ஷ்மிக்கு திமிரு. அப்டி லவ் பண்றா. 100% லவ் பண்றா. என்னை விட நான் எப்படியும் வெளியில் வந்துவிடுவேன் என அவள்தான் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்” என்றார்.

எத்தனை சோதனை வந்தாலும், ஊர் உலகம் என்ன பேசினாலும் தங்கள் காதலையும், திருமண வாழ்க்கையையும் விட்டுக் கொடுக்காது ஒருவருக்கு ஒருவர் இணைபிரியாது வாழ்ந்து வருகின்றனர்.

அதேசமயம் ரவீந்திரன் குப்பையில் இருந்து எனர்ஜி எடுப்பதாகக் கூறி, பல கோடிகளை மோசடி செய்த வழக்கும் தற்போதும் நடைபெற்று வருகிறது. ஒரு காதல் ஜோடியாகவும், தம்பதியாகவும் தாங்கள் வாழ்ந்து வருவதை அவர்கள் உதாரணமாகக் காட்டி வருகின்றனர். காதலுக்கு கண்ணில்லை. அது அழகு பார்க்காது, தோற்றம் பார்க்காது, அன்பான மனது இருக்கிறதா? என்று மட்டுமே பார்க்கும் என மஹாலக்ஷ்மி நிரூபித்துவிட்டார். காதலிப்பதோ, திருமணம் செய்வதோ முக்கியமில்லை. கடினமான சூழல்கள் வரும்போது ஒருவருக்கு ஒருவர் எப்படி ஆதரவாகவும், இணையாகவும் வாழ்ந்து வருகிறார் என்பதே முக்கியம் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE