விஜய் டிவியில் பிரபலமான சீரியலாக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த நாடகத்தில் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டதாக, அதில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த சரவணா விக்ரம் கூறியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் கூட்டுக்குடும்பமாக அண்ணன் தம்பிகள் 4 பேர் ஒன்றாக வசித்து வருகின்றனர். அவர்களது ஒற்றுமையை பிரிக்க பல சந்தர்ப்பங்களில் பல பிரச்சனைகள் எழுந்தன. ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிட்ட பின்பும் மீண்டும் அவர்களது பாசம் மற்றும் சில சூழல்களின் காரணமாக ஒன்றிணைந்து கொண்டனர்.

ஒற்றுமைக்கு உதாரணமாகவும் கூட்டுக் குடும்பத்திற்கு உதாரணமாகவும் வாழ்ந்து வருகின்றனர் அந்த குடும்பத்தின் மருமகள்கள் அவர்கள் எல்லாரும் எப்போதும் புகுந்த வீட்டிற்கே சப்போர்ட் செய்யும் அளவுக்கு அந்த குடும்பம் அவ்வளவு அன்பு மழையை பொழிந்து ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தது.

கூட்டுக் குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் பலரும் இந்த குடும்பத்தை உதாரணமாக காட்டி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் மீனா என்ற கதா பாத்திரத்தின் தந்தை ஜனார்த்தனன் கத்திக் குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், ரொமான்டிக் கப்புலாக அறியப்படும் ஜீவாவும் மீனாவும் இதனால் பிரிந்து விட்டனர். ஜீவா ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள நிலையில் அவரது சகோதரர் கதிரும் சிறையில் உள்ளார். தந்தை-தாயின் நிலையை அறிந்த மீனா இதற்கு தன் கணவனும் அவர் வீட்டாரும்தான் காரணமென நினைத்து, தனது குழந்தை கயலுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

இந்த நிலையில் ஜனார்த்தனன் உயிர் பிழைத்து வாக்குமூலம் அளித்தாலே ஒழிய ஜீவாவும் கதிரும் வெளிவர வாய்ப்பு இல்லை என்று சூழலில் உருவாகியுள்ளது. இந்த பிரச்சினையில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்க போகிறார்கள் என ரசிகர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனாக நடித்த சரவணா விக்ரம் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் நேற்றுடன் பி எஸ் அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு இறுதி நாள் முடிந்து விட்டதாகவும், எனவே படப்பிடிப்பு முடிந்த கையோடு தான் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதாகவும் கூறி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்கு தான் போவதாகவும் “பாண்டியன் ஸ்டோர்ஸில் கண்ணனுக்கு எவ்வளவு ஆதரவு கொடுத்தீர்களோ அதே ஆதரவை பிக் பாஸ் வீட்டில் சரவண விக்ரமுக்கும் தொடர்ந்து கொடுங்க. 3 மாசம் கழிச்சு கப்போட தான் வரும் வெளிய வருவேன்” என்று அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இதன் மூலம் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் முடிவுக்கு வருவதாக வந்த வதந்திகள் உறுதியாகியுள்ளன.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE