என்னோட முதல் சினிமா சம்பளம் ரூ. 250- விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் அவர் கூட்டத்தோடு ஒருவராக எந்த ஒரு கதாபாத்திரத்தின் பெயர் கூட கொடுக்கப்படாது சில இடங்களில் வெள்ளித்திரைகளில் தோன்றியிருக்கிறார். அவற்றை நாம் கவனித்ததில்லை. அதுபோல அவர் ஏராளமான படங்கள் நடித்திருந்தாலும் சில திரைப்படங்களை சுட்டிக்காட்ட முடியும் அவற்றில் ஒன்றுதான் புதுப்பேட்டை.

புதுப்பேட்டை படத்தில் நடிகர் தனுஷுக்கு நண்பராக நடித்திருந்தார் விஜய்சேதுபதி

ஏற்கனவே நடிப்பு சொல்லிக் கொடுக்கும் சென்னையைச் சேர்ந்த மையமான கூத்துப்பட்டறையில் அக்கவுண்ட்டாக பணியாற்றிய போது நடிப்பு திறமைகளை அவர் கிரகித்துக் கொண்டார். பல சீரியல்களில் நடித்த இவர் நாளைய இயக்குனர் என்ற கலைஞர் டிவியில் நடந்த நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜின் சில படங்களில் நடித்திருந்தார்.

நார்வே தமிழ் ஷார்ட் ஃபிலிம் திருவிழாவில் அவர் நடித்த படம் விருதும் பெற்றது.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் கிக் பாக்ஸிங் நிகழ்ச்சி நடக்கும்போது பார்வையாளராக அமர்ந்திருந்தார். மேலும் நதியாவின் பிறந்தநாளுக்கு பூங்கொத்து கொடுக்கும் பல மாணவர்களில் ஒருவராகவும் அமர்ந்திருந்தார். புதுப்பேட்டை படத்தில் நடிகர் தனுஷ்-க்கு நண்பராகவும், லீ மற்றும் வெண்ணிலா கபடி குழுவில் பெயர் கூட இல்லாத ஒரு கதாபாத்திரமாகவும் நடித்திருந்தார்.

இது பற்றி இறைவன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, இப்படத்திள் இயக்குனர், தனது படங்களுக்கு நல்ல தமிழ் பெயர்களை வைப்பதாக கூறினார். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், இறைவன் என பெயர் வைப்பதாகவும் ஆனால் இறைவன் என்று பெயர் வைத்துவிட்டு சைக்கோ கொலைகாரன் பற்றிய பயங்கரமான படத்தை எடுத்திருப்பதாகவும் கூறினார். முதன் முதலில் தான் சினிமாவுக்கு வந்த போது தான் முதன் முதலில் பார்த்த நடிகர் ஜெயம் ரவி என்றார்.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் தான் கீழே நின்று தனக்கு மேல் நின்று கொண்டிருந்த ஜெயம் ரவியை வியப்பாக பார்த்ததாக கூறினார். தனது முதல் படத்துக்கு சம்பளம் ரூ.250 கிடைத்த நிலையில் இரண்டாவது படத்திற்கு அதாவது எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமயில் நடிக்க வேண்டும் என்பதற்காக 400 ரூபாய் பணம் கொடுத்ததாக கூறினார். அது தனக்கு பெரிய இன்கிரிமென்டாக இருந்ததாகக் கூறினார். திரையுலகில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி வந்த விஜய் சேதுபதி தற்போது தனது கடின உழைப்பால் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார்.

விடாமுயற்சியும் கடின உழைப்பும் என்றும் வெற்றி தரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டி வருகிறார் விஜய் சேதுபதி.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE