சாதாரண குடும்பத்தில் பிறந்து இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் இளவரசியாக உருவெடுக்க இவருக்கும் இளவரசர் சார்லஸ் என்பவருக்கும் மலர்ந்த காதலே காரணம். சாதாரண குடிமக்களில் ஒருவர் இங்கிலாந்து நாட்டின் இளவரசியாவதை இங்கிலாந்து நாட்டு குடிமக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

இருவருக்கும் மகன்கள் பிறந்தனர். இளவரசர் சார்லஸ்க்கு திருமணத்தை மீறிய ஒரு உறவு அமைந்தது. இதன் விளைவாக இளவரசி டயானாவும் வேறு ஒருவரை காதலிப்பது போன்று ஊடகங்களில் தகவல் வெளியாகின. பேப்பராசி எனப்படும் பிரபலங்களின் தனிப்பட்ட விஷயங்களை எழுதும் பத்திரிகையாளர்களால் இளவரசி டயானா துரத்தப்பட்டார்.

அவர்களிடமிருந்து தப்பிக்க காரை வேகமாக இயக்கியதன் விளைவாக டயானா விபத்தில் மரணம் அடைந்தார். இது அரசு குடும்பத்தின் திட்டமிட்ட சதி என்று கூட பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தன.

ஆடியோ பதிவு

இளவரசி டயானா தனது வாழ்க்கையின் பல முக்கியமான நிகழ்வுகளை ஆடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார். இதை அடுத்து அதனை 1990களில் தனது வாழ்க்கை வரலாற்று குறிப்பு எழுதும் நபரிடம் அது கிடைக்கப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதனை மையமாக வைத்து தான் “டயானா ஹெர் ட்ரு ஸ்டோரி” என்ற புத்தகம் 1992ல் வெளியானது.

கிட்டத்தட்ட 7 மணி நேரம் மொத்தமாக அந்த ஆடியோ பதிவுகள் உள்ளன. ஆனால் அந்த புத்தகத்தில் மிக குறைவான ஆடியோ பற்றிய தகவல்களே வெளியானது. இதனால் “ஏபிசி-யின் குட்மார்னிங் அமெரிக்கா” என்று செய்தி நிறுவன வெளியீட்டிபடி “டயானா – த ரெஸ்ட் ஆஃப் ஹெர் ஸ்டோரி” என்ற பெயரில டாக்குமென்ட்ரி வெளியாகி உள்ளது.

இளவரசி டயானா இறந்து 26 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அந்த ஆடியோ டாக்குமென்டரி வெளியிடப்பட்டுள்ளது. தனது கணவர் தனது வளர்ப்பு தாயிடம் பேசியது பற்றி அந்த குறிப்புகளில் உள்ளது.

டயானாவின் வளர்ப்புத்தாய் ரெய்னே ஸ்பென்சர். அவர் தனது இரண்டாவது மகன் ஹேரியின் “கிறிஸ்டியன் மத சடங்கு” நடைபெற்ற போது அவரும் தனது கணவரும் என்ன பேசிக் கொண்டனர் என்று அதில் உள்ளது.

“ஹாரியின் கிறிஸ்டினிங் நிகழ்ச்சியின் போது சார்லஸ் அம்மாவிடம் போய் பேசினார்.

“உங்களுக்கு தெரியுமா நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்து விட்டோம் இரண்டாவதாக பிறந்தது பெண் குழந்தையாக இருக்கும் என நம்பினோம்“ என இளவரசர் கூறினார்.

இதைக் கேட்ட மம்மி கோபமாக சார்லஸ் இடம் பதில் அளித்தார். குழந்தை நல்ல விதமாக பிறந்ததை எண்ணி நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை உணர வேண்டும் என கூறினார்.

அது முதல் வளர்ப்பு தாயுடன் ஆன உறவில் ஒரு கதவடைந்தது போல் ஒரு நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார். சார்லசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர் அப்படித்தான் நடந்து கொள்வார்” எனவும் அந்த ஆடியோ டேப்பில் இளவரசி டயானா கூறியுள்ளார்.

தனது வளர்ப்பு தாய் பற்றியும் அந்த ஆடியோ கிளிப்பில் பேசிய டயானா “எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் உன்னை வெறுக்கிறேன் என்றே சொல்லிவிட்டேன். நீங்கள் எங்களுக்கு செய்ததற்கெல்லாம் நாங்கள் உங்களை எவ்வளவு வெறுக்கிறோம் தெரியுமா? நீங்கள் வீட்டையே நாசமாக்கி விட்டீர்கள். நீங்கள் அப்பாவின் பணத்தை செலவு செய்து விட்டீர்கள். என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அத்தனையும் கூறினீர்கள்.”

இதைக் கேட்ட ரெய்னே, “உங்க அம்மா உங்க அப்பாவுக்கு எவ்வளவு வலியை கொடுத்தாங்கன்னு உனக்கு தெரியாது” என்றார்

“வலியா ரெய்னா? அந்த வார்த்தையை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று கூட உங்களுக்கு தெரியாது. என் வேலையில், எனது பொறுப்பில் நீங்கள் பார்க்காத கஷ்டங்களை எல்லாம் நான் பார்த்து விட்டேன். நீங்கள் அதை வலி என்கிறீர்களா? நீங்கள் இதை பற்றி ஒரு பாடம் கற்கும் நேரம் வரும்.”

தனது உடன்பிறப்புகளுடன் சேர்ந்து “ரெய்னே, ரெய்னே, கோ அவே” என்றும், ஆசிட் ரெய்னே என்று விமர்சிப்பது பற்றியும் அந்த ஆடியோவில் உள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE