“தில்“ படத்தில் தமிழ் திரை உலகில் அறிமுகமானாலும் 1991 முதலே, இந்தி, மலையாளம், கன்னடா, தெலுங்கு பெங்காலி, இங்கிலீஷ் என பல மொழிகளில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் ஆஷிஸ் வித்யார்த்தி. குறிப்பாக கில்லி படத்தில் வேலு என்ற விஜய் கதாபாத்திரத்திற்கு தந்தையாக நடித்திருப்பார்.

இவர் தனது 60 வயதில் விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த விவாகரத்து பற்றி முன்னாள் மனைவியோ, ஆஷிஷ் வித்யார்த்தியோ இதுவரை எதுவுமே பேசாமல் மௌனம் காத்து வந்தனர்.

மௌனம் கலைந்தது

மனைவி ரஜோஷி, முதன்முறையாக தனது விவாகரத்து பற்றி பேசி உள்ளார்.

எப்போது பிரிந்தனர் ?

ஆஷிஷ் வித்யார்த்தி ரஜோஷி ஆகியோரின் விவாகரத்து தற்போது முடிவாகவில்லை. 2021 ஆம் ஆண்டே இருவரும் பிரிந்து விட்டனர்.

திருமண வாழ்க்கை எப்படி?

இணையராக இருவரும் 22 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தது தான் வாழ்க்கையின் மிக சிறப்பான நாட்கள் என்று பிலு கூறியுள்ளார். ஆஷிசை கேட்டாலும் அவர் கூட இதையேதான் சொல்வார் என்றும் குறிப்பிட்டார். இருவருக்கும் பல்வேறு விஷயங்களில் ஒற்றுமையும் வேற்றுமையும் இருந்ததாகவும் ஆனால் ஒருவருக்கொருவர் எப்போதுமே குறை கூறி வேற்றுமையை பற்றி பேசியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மகனின் வளர்ப்பு

பொதுவாக ஒரு குழந்தையின் வளர்ப்பு என்பது தாய்க்கு உரியது. ஆனால் தனது மகன் வளர்ப்பில் அதிகம் சிரத்தை எடுத்துக் கொண்டது ஆஷிஷ் வித்யார்த்தி தான் என்று கூறுகிறார் ரஜோஷி. தனது மகன் நன்றாக படித்து தற்போது வெளிநாட்டில்டெஸ்லா நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் அவருக்கு ஒரு நல்ல நண்பனாக, சிறந்த ஆசானாக, நல்ல தந்தையாக, நல்லதொரு வழிகாட்டியாக இருந்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி என்றும் கூறியுள்ளார்

இருந்தும் ஏன் விவாகரத்து?

22 ஆண்டுகள் மகிழ்ச்சியான திருமண வாழ்வில் இருந்துவிட்டு இருந்தும் ஏன் விவாகரத்து செய்கிறீர்கள் என பலரும் கேட்கலாம். எங்கள் வாழ்வின் பெரும்பாலான நாட்களை எங்கள் மகனை வளர்ப்பதிலேயே கழித்து விட்டோம். தற்போது எங்களது மகன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கென ஒரு வாழ்க்கை அமைந்து விட்டது. எனவே எங்களைப் பற்றியும் எங்களது வாழ்க்கையை பற்றியும் திட்டமிடுதலுக்கான நேரம் இது என்று இருவரும் உணர்ந்து கொண்டதாக கூறியுள்ளார். எனவே இருவரும் தங்களது இண்டிவிஜுவல் விருப்பங்களுக்காக மீதம் இருக்கும் வாழ்க்கையை செலவழிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

நானும் மறுமணம் செய்யப்போகிறேனா?

இதனால்தான் ஆசஸ்வத்யார்த்தி மறுமணம் செய்து கொண்டதாகும் சுட்டிக்காட்டிய அவர் அதற்காக தானும் மறுமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். ஏனெனில் தன்னுடைய விருப்பங்களும் லட்சியங்களும் வெவ்வேறு என்றும் மறுமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார்.

தடை இல்லை

தான் ஏதேனும் செய்ய விரும்பினால் அதற்கு ஆஷிஸ் வித்யார்த்தி தடையாக இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார். இருப்பினும் இருவரும் அவரவருடைய வாழ்க்கை, வரவு, செலவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தனித்தனியாக வாழ முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார். எனவே விவாகரத்து செய்துவிடலாம் என தான் கூறிய வார்த்தையையும் ஏற்று அதற்கு சம்மதித்ததாக கூறியுள்ளார்

எந்த ஒரு சண்டை, சச்சரவு, பிரச்சனை, கூச்சல், குழப்பம் ஏதும் இன்றி விவாகரத்து பற்றி முடிவு எடுத்ததாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

தங்கள் பார்த்ததிலேயே மிகவும் ஜெனியூனான, மெச்சூரான விவாகரத்து இது என பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE