விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் அறிமுகமான நடிகை சமந்தா, தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழி திரைப்படங்களில் ஹிட் படங்களை நடித்து அசத்தியவர். நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்ட சமந்தா, பின் அவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார்.

நோய்

இந்த நிலையில் தான் நடிகை சமந்தாவுக்கு மையோசைடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தான் அனுபவிக்கும் தொந்தரவுகளை பல பேட்டிகளில் கூறியுள்ளார். ”சில நேரம் சுறுசுறுப்பாக இருக்கும். துள்ளிக் குதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். சில நேரம் சோர்வாக இருக்கும். சில நேரம் படுக்கையில் இருந்து எழக்கூட முடியாது.” என அவர் தனது அசவுகரியங்களைக் கூறியுள்ளார்.

நோயின் தீவிரம்

சில நாட்கள் கையில் ட்ரிப்ஸ் போட்டபடியே வாழ வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டார். அவருக்கு பிரைட்டான லைட்டைக் காணும் போது தலைவலி ஏற்படும் எனக் கூறியுள்ளார். மைக்ரெய்ன் தலைவலி அதிகரித்து சமாளிக்க முடியாமல் போய்விடும் எனக் கூறினார்.

நடிப்புக்கு சிக்கல்

திரைப்படப் படப்பிடிப்புக்களில் அதிகளவு லைட் பயன்படுத்தப்படும். நடிப்புத் தொழிலில் அத்தகைய லைட்கள் கண்டிப்பாக சூட்டிங் ஸ்பாட்டில் இடம் பெற்றிருக்கும். அவற்றுக்கு மத்தியில் தான் அவர் நடிக்க வேண்டியிருக்கும். எனவே, அது சமந்தாவுக்கு குறிப்பாக அவரது உடல் ஆரோக்யத்துக்கு அதிக இடையூறாக இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

கண்ணாடி

கண் கண்ணாடி என்பதைத் தான் ஸ்டைலுக்கு அணிவதில்லை என்றும், தனக்குரிய மைக்ரெய்ன் பிரச்னையை அதிகரிக்கும் லைட்டின் பிரகாசத்தைத் தவிர்க்கவே தான் தான் கண்ணாடி அணிவதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் சமந்தா.

நடிப்புக்கு பிரேக்

உடல் நலம் அவ்வப்போது மோசமாவதால் தன்னால் அனைத்து நாட்களிலும் சூட்டிங் செல்ல முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்து வரும் ஓராண்டுக்கு நடிப்பில் இருந்து ஓய்வெடுத்து உடல் நலனைக் கண்காணிக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அட்வான்ஸ் திருப்பிக் கொடுத்தாரா?

படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்க முடியாத காரணத்தாலும், நடிப்பில் இருந்து ஒரு வருடம் ஓய்வு எடுத்து மையோசிடிஸ் ஆட்டோ இம்யூன் நோய்க்கு சிகிச்சை எடுக்க இருப்பதாலும் நடிகை சமந்தா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளாராம். அதன்படி, ஏற்கெனவே ஒப்புக்கொண்டு வாங்கிய அட்வான்சை தயாரிப்பாளர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா

நடிகை சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வெடுத்தாலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருப்பார் என சொல்லப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE